அறிவு கெட்ட அரசியை கொடுமைப்படுத்தும் குமரவேலு.. ரத்தக்கண்ணீர் வடிக்கும் பாண்டியன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் கடைக்கு கிளம்பி கொண்டிருக்கும் பொழுது பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. அதனால் அதை ஸ்டார்ட் பண்ணி கொண்டிருக்கும் பொழுது வெளியே நின்ற குமரவேலு, பாண்டியனை சீண்டிப் பார்க்கும் விதமாக அரசியை கூப்பிடுகிறார். அரசி வந்ததும் உள்ளே இருக்கும் பர்ஸை எடுத்துட்டு வா என்று ஆர்டர் போடுகிறார்.

அரசியும் உள்ள போய் செக் பண்ணி பர்ஸை எடுத்துட்டு வந்து கொடுக்கிறார். ஆனால் குமரவேலு இது என்னுடைய பர்ஸ் இல்லை, உன் கண்ண வச்சு நல்லா தேடி பாத்துட்டு வா என்ன சொல்லி அனுப்புகிறார். மறுபடியும் அரசி வந்து வேற பர்ஸ் எதுவும் இல்லை என்று சொன்னதும் குமரவேலு வீட்டுக்குள் போய் சுத்தி பார்த்துட்டு வரியா? உன் கண்ண வச்சு நல்லா பார்க்க மாட்டியா?

என்ன வளர்த்துக்காக உன்ன என்று திட்டி விட்டு மண்டையில் கொட்டி விடுகிறார். இதை எல்லாம் பார்த்து கடுப்பான பாண்டியன் ரத்தக்கண்ணீர் வடித்து பைக்கை கோபத்தில் கீழே தள்ளிவிட்டு குமரவேலுவே முறைத்து பார்க்கிறார். ஆனால் இந்த குமரவேலு, இனி என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நினைப்பில் தெனாவட்டாக அரசியை கொடுமைப்படுத்த ஆரம்பித்து விட்டார்.

முன்னாடியாவது குமரவேலு ஏதாவது சேட்டை பண்ணா செந்தில் கதிர் எல்லோரும் தட்டி கேட்பார்கள். ஆனால் தற்போது அரசி வாக்கப்பட்டு போனதால் குமரவேலு என்ன பண்ணாலும் எதையும் கேட்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலைமை. இதற்கெல்லாம் காரணம் அறிவு கெட்ட அரிசி முட்டாள்தனமான முடிவை எடுத்ததுதான்.

அது மட்டும் இல்லாமல் வீட்டுக்குள் வந்த அரசியை சாப்பாடு வைக்க சொல்லி குமரவேலு சொல்கிறார். ஆனால் அரசி முடியாது என்று சொன்ன நிலையில் சாப்பாடு டேபிளை மாடியில் இருக்கும் ரூமுக்கு கொண்டுட்டு வந்து விடுகிறார். அதன் பின் அரசியை கீழே இருக்கும் ஒவ்வொரு சாப்பாட்டையும் எடுத்துட்டு வர சொல்லி பாடாபடுத்தி எடுக்கிறார்.

ரொம்பவே சோர்வான அரசி, குமரவேலுக்கு பரிமாற ஆரம்பிக்கும் பொழுது பாண்டியனையும் அரசியின் அண்ணன்களையும் தவறாக பேசி கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டார். இதையெல்லாம் பார்க்கும் பொழுது அவ்வளவு ஆத்திரமாக இருக்கிறது அந்த அளவுக்கு குமரவேலு, அரசியை டார்ச்சர் பண்ணுகிறார். இருந்தாலும் இதையெல்லாம் அரசி பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

குமரவேலுவை பழிவாங்க வேண்டும் என்று நினைக்கும் அரசி ஒவ்வொரு நாளும் அவனிடம் மாட்டிக் கொண்டு சித்தரவதை அனுப்பி வைக்கிறார். கடைசியில் கொதிக்கிற சாம்பாரை குமரவேலு தலையில் ஊற்றி அரசின் கோபத்தை குறைத்துக் கொள்கிறார். இருந்தாலும் இதில் ஒரு பிரயோஜனமும் இல்லை, வீணாப்போன அரசி செய்த காரியத்தால் பாண்டியன் குடும்பம் அவஸ்தைப் பட்டு வருகிறது.