வீரா சீரியலில் பிசினஸில் கொடி கட்டி பறக்கும் மாறன் வீரா.. வள்ளி அத்தைக்கு ஆப்பு வைத்த விஜி

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், மாறன் புதுசாக பிசினஸ் பண்ண வேண்டும் அதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது என்று தெரிந்ததும் வீரா ஆட்டோ ரேஸில் கலந்து கொண்டார். ஆனால் அதில் ஏகப்பட்ட அவமானங்களையும் சிக்கல்களையும் சந்தித்த பொழுது வீராவுடன் சப்போர்ட்டாக நின்னது மாறன் தான்.

அந்த வகையில் இரண்டு பேருக்கும் வெற்றி கிடைத்து விட்டது. வீரா எதிர்பார்த்தபடி இதில் கிடைத்த பணத்தை வைத்து மாறனுக்கு டிரஸ் பிசினஸை ஆரம்பிப்பதற்கு கொடுத்து விடுகிறார். அதன்படி வீரா மற்றும் மாறன் புதுசாக பிசினஸை ஓபன் பண்ண வெற்றியை பார்ப்பதற்கு தயாராகி விட்டார்கள்.

ஆனால் இந்த ஓப்பனிங் பங்க்ஷன்க்கு அப்பா வருவார் என்று மாறன் எதிர்பார்த்தார். ஆனால் ராமச்சந்திரன் வராத பட்சத்தில் வள்ளியை வைத்து கடையை திறந்து விட்டார்கள். பிறகு கடையை ஓப்பன் பண்ணும் போது தான் தெரியுது அந்த கடைக்கு வள்ளி என்று அத்தை பெயரை வைத்திருக்கிறார் என்று.

இதற்கெல்லாம் முழுக்க முழுக்க காரணம் வீரா தான் என்று மாறன் சொல்லிய நிலையில் வள்ளி உணர்ச்சிப்பூர்வமாக பீல் பண்ண ஆரம்பித்து விடுகிறார். இன்னொரு பக்கம் கண்மணி தன்னுடன் கூட்டு சேர்ந்து விட்டார் என்று தவறாக புரிந்து கொண்டு விஜி, உங்களுக்கு இந்த குடும்பத்தில் யாரை ரொம்ப பிடிக்கும் என்று கண்மணி இடம் கேட்கிறார்.

கண்மணியும் விஜியிடம் கெட்டவள் போல் டிராமா போட்டு நடித்து வருவதால் எனக்கு இந்த வீட்டில் வள்ளியை தான் பிடிக்கும் என்று சும்மா சொல்லி விடுகிறார். உடனே விஜி, அப்படி என்றால் முதல் பாயாசம் வள்ளிக்கு தான் என்று வள்ளியை காலி பண்ணுவதற்கு தயாராகி விட்டார்.

இதை தெரிந்து கொண்ட கண்மணி, நம்ம நினைத்ததை விட இந்த விஜி ரொம்பவே வேகமாக இருக்கிறார் என்று முடிவு பண்ணி இந்த விஷயத்தை மாறன் மற்றும் வீராவிடம் சொல்வதற்கு முடிவு பண்ணி விட்டார். அந்த வகையில் வள்ளிக்கு விஜி மூலம் வரும் ஆபத்தை தடுத்து மாறன் மற்றும் வீரா காப்பாற்றி விடுவார்கள்.