Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், புவனேஸ்வரி ரகுராமுக்கு எதிராக போடும் ஒவ்வொரு பிளானையும் சுக்கு நூறாக உடைக்கும் விதமாக மாயா, புவனேஸ்வரி முகத்தில் கரியை பூசி விட்டு ரகுராம் குடும்பத்தை காப்பாற்றி விடுகிறார். அந்த வகையில் இப்பொழுதும் கையை விட்டு போக இருந்த வீட்டை மாயா காப்பாற்றி கொடுத்திருக்கிறார்.
இதனால் ரகுராம், மாயாவை புரிந்து கொண்டாரோ இல்லையோ சீனு நன்றாக புரிந்து கொண்டார். அத்துடன் மாயா எது செய்தாலும் சரியாக இருக்கும் என்ற மனநிலமைக்கு சீனு வந்துவிட்டார். உடனே ரொமான்ஸ் பண்ணும் விதமாக பூ வாங்கிட்டு வந்து மாயா தலையில் வைத்து கொஞ்ச ஆரம்பித்து விட்டார். இப்பொழுது தான் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.
ஆனால் அதற்குள் பத்மா இவர்கள் இருவரையும் பிரித்துவிட்டு சாருவை சீனுவுக்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்கு பிளான் பண்ணி விட்டார். அந்த வகையில் லிங்கா மற்றும் சாருவை கோவிலுக்கு பத்மா வரச் சொல்லி பேசுகிறார். அதாவது சாறு தான் என்னுடைய மருமகள், ஆனால் இப்போது நான் அவளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையை பார்க்க போகிறேன் என்று சொன்னதும் லிங்கா மற்றும் சாருக்கு ஒண்ணுமே புரியவில்லை.
அப்பொழுது பத்மா சொன்னது என்னவென்றால் சாருக்கு நான் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் மேடை வரை கூட்டிட்டு வருவேன். ஆனால் அதன் பின் அந்த மாப்பிள்ளை சாரு கழுத்தில் தாலி கட்ட போவதில்லை. அதற்கு பதிலாக என்னுடைய மகன் சீனு தான் தாலி கட்டுவான். அதற்கு நான் பொறுப்பு என்று பத்மா பிளான் போட்டு சொல்கிறார். இதை கோவிலுக்கு வந்த தனம் மறைந்திருந்து கேட்டு விடுகிறார்.
அந்த வகையில் மாயா மற்றும் சீனு பிரியாத படி தனம் மற்றும் கதிர் இருவரும் சேர்ந்து மாயாவின் வாழ்க்கையை காப்பாற்றி விடுவார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் ரகுராம் மற்றும் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் மாயா செஞ்ச எல்லா நல்ல விஷயங்களும் தெரிந்து விட்டால் பிரச்சனை ஒரு தீர்வுக்கு வந்துவிடும்.