Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், பத்மாவும் பார்வதியும் போடும் திட்டங்கள் எல்லாம் மாயாவுக்கு எதிராக இருக்கிறது. மாயாவை சீனுவிடமிருந்து பிரிக்க வேண்டும் என்பதற்காக சாருக்கு சீனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க பிளான் பண்ணி விட்டார்கள். அதன்படி ஒரு போலியான மாப்பிள்ளையை ரகுராம் வீட்டிற்கு சாருவை பொண்ணு பார்க்க வரவைத்து விட்டார்கள்.
அந்த மாப்பிள்ளையும் சாருவை பார்த்துவிட்டு பிடித்து விட்டது என்று சொல்லியதால் கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் ஆரம்பமாகிவிட்டது. இதற்கிடையில் சாருவும் சீனுவும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு வீடியோவை எடுப்பதற்கு தயாராகி விட்டார்கள்.
அதற்காக சாருக்கு ஷாக் அடித்து விட்டது என்று சீனுவை பத்மா பார்வதி கூட்டிட்டு வருகிறார்கள். சீனு, சாருவை எழுப்பி பார்த்ததும் எழும்பாமல் மயக்கத்திலே இருப்பது போல் நடிக்கிறார்.
இதனால் சீனு, சிபிஆர் பண்ணி மூச்சு கொடுத்து சாருவை காப்பாற்றுவதற்கு தயாராகி விட்டார். அப்படி பண்ணும் பொழுது பார்வதி யாருக்கும் தெரியாமல் மொபைலில் வீடியோ எடுக்க தயாராகி விட்டார்.
ஆனால் இவர்களுடைய பிளானை தெரிந்து கொண்ட மாயா, சீனுவை தடுத்து நிறுத்திவிட்டார். அதற்கு பதிலாக இன்னொரு ட்ரீட்மென்ட் இருக்கிறது என்று சொல்லி கரண்ட் ஷாக் கொடுத்து சாருவின் காலில் வைத்து விடுகிறார்.
இதனால் பொய் சொல்லி மயக்கத்தில் இருப்பது போல் நடிக்கும் சாருக்கு உண்மையிலேயே கரண்ட் ஷாக் அடிப்பது போல் ஆகிவிட்டது. சாருவை காப்பாற்றும் விதமாக பார்வதி பத்மாவும் கரண்ட் ஷாக்கில் மாட்டிக் கொண்டார்கள்.
மாயா இருக்கும் வரை பத்மா பார்வதி போட்ட பிளான் எதுவும் நடக்காது என்பதற்கேற்ப மாஸ் காட்டிவிட்டார். இதே மாதிரி கல்யாணத்திலும் மாயா தனம் கதிர் உடைய கலாட்டாக்கள் ஆரம்பமாகப் போகிறது. இதனால் சீனு எஸ்கேப் ஆகி பார்வதி பத்மா பார்த்திருக்கும் மாப்பிள்ளை உடன் சாருக்கு உண்மையிலேயே கல்யாணம் நடந்து விடும்.