Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், முத்துவேல் வீட்டில் வந்து எல்லா பணத்தையும் எடுத்துட்டு போன இன்கம் டேக்ஸ் ஆபிஸர், மில்லு மற்றும் கடையிலையும் கணக்கில் காட்டப்படாத பணத்தை எடுத்துட்டு போய் விட்டார்கள். இதனால் பணம் மொத்தமும் கைவிட்டு போய்விட்டது என்ற வருத்தத்தில் சக்திவேல் முத்துவேல் இருக்கிறார்கள்.
அதோடு இதுவரை இல்லாமல் இப்பொழுது இந்த மாதிரி நமக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என்றால் வீட்டுக்கு வந்தவள் ராசி தான் என்று அரசியை குறைக்கூறும் அளவுக்கு சக்திவேல் பேசி விட்டார். ஆனால் அப்பத்தா அரசிக்கு சப்போர்ட்டாக பேசி ரூம் குள்ள அனுப்பி வைத்து விட்டார். பிறகு குமரவேலுவிடம் உன் பொண்டாட்டியை உங்க அப்பா வாய்க்கு வந்தபடி பேசுகிறார். நீ பார்த்துகிட்டு சும்மா இருக்க என்று அப்பத்தா கேட்டதும் அப்பா சொன்னதும் உண்மைதான என்று குமரவேலும் சக்திவேலுக்கு ஆதரவாக நிற்கிறார்.
அடுத்ததாக சக்திவேல், குமரவேலுவிடம் இதுவரை இப்படி இன்கம் டேக்ஸ் ஆபிஸில் வந்து யாரும் ரைட் பண்ணவே இல்லை. இப்பொழுது புதுசாக வந்திருக்கிறார்கள் என்றால் ஒருவேளை அரசி போன் பண்ணி சொல்லி இருப்பாளா, நீ ஏதாவது பண விஷயத்தை அரசிடம் உளறி வைத்தியா என்று கேட்கிறார். அதற்கு குமாரு பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தை இதுவரை நான் பேசுனதே இல்லை என்று சொல்லிய நிலையில் நம்மளை மாட்டிவிடனும் என்று யாரோ நமக்கு வேண்டாதவங்க தான் போன் பண்ணி தகவலை சொல்லி இருப்பாங்க.
அப்படி இன்கம் டெக்ஸ் ஆபிசுக்கு போன் பண்ணி தகவலை சொன்னது யார் என்று கண்டுபிடிக்கணும் என்று சக்திவேல் இடம் முத்துவேல் சொல்கிறார். அதன்படி சக்திவேலும், மீனாதான் போன் பண்ணி சொல்லி இருக்கிறார் என்று போன் நம்பர் மூலம் கண்டுபிடித்து விடுவார். இதனால் சக்திவேல் மற்றும் முத்து வேலுவிடம் மீனா மாட்டிக் கொள்ளப் போகிறார்.
அடுத்ததாக தங்கமயில் வீட்டிற்கு வந்த பக்கத்து வீட்டுக்காரங்க தேவையில்லாத வார்த்தைகளை சொன்னதால் பாக்கியம் இன்னும் உனக்கு இரண்டு நாள் தான் டைம். அதற்குள் உன் புருஷன் வந்து உன்னை கூட்டிட்டு போனா சந்தோசம், இல்லை என்றாலும் நீ அந்த வீட்டுக்கு போய் இரு என்று சொல்லிவிடுகிறார். இதனால் சரவணனுக்கு தங்கமயில் போன் பண்ணி பார்க்கிறார். போன் எடுக்கவில்லை என்றதும் நேரடியாக சரவணன் வேலை பார்க்கும் கடைக்கு போய் விடுகிறார்.
ஆனால் சரவணன் கடைக்கு வரவில்லை என்று தெரிந்ததும் தங்கமயில் போன் பண்ணுகிறார். ஆனால் வழக்கம் போல் சரவணன் போன் எடுக்காமல் விட்டதால் அங்கு இருக்கும் சரவணன் நண்பர் போனை வாங்கி போன் பண்ணுகிறார். அப்பொழுது தங்கமயில் என்ன பேச வருகிறார் என்று கூட காது கொடுத்து கேட்காமல் சரவணன் , உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை.
இனி போன் பண்ணி என்னை தொந்தரவு பண்ணாதே, உன் அம்மா வீட்டிலேயே இருந்து விடு என்று சொல்லிவிடுகிறார். இதனால் நொந்து போன தங்கமயில் விபரீத முடிவை எடுக்கப் போகிறார். அதன்பின் தான் சரவணன், வேற வழி இல்லாமல் தங்கமயிலை வீட்டிற்கு கூட்டிட்டு வருவார்.