Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ரொம்ப கண்டிப்பாக இருக்கும் இடத்தில் தான் தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு சொலவடை உண்டு. அது போல தான் பாண்டியன், மகன்களிடம் காரராக நடந்து கொள்வார். இதனால் செந்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். கடையில் வேலை பார்க்கும் பொழுதே நிறைய அவமானங்களையும் சந்தித்து இருக்கிறார்.
இதனால் வெறுத்துப்போன செந்திலுக்கு மாமனார் சொன்ன அட்வைஸ் கடையில் வேலை பார்ப்பதை விட கவர்மெண்ட் உத்தியோகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசை காட்டி விட்டார். செந்திலும் இதுதான் சரி என்று முடிவுக்கு வந்தார் ஆனால் படித்து எழுத முடியாது என்பதால் லஞ்சம் கொடுத்து வேலையை வாங்கிவிடலாம் என்று மாமா சொன்னதற்கு சரி என்று தலையை ஆட்டிவிட்டார்.
ஆனால் அதற்கு 10 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்பதால் பாண்டியனிடம் பணம் கேட்டார். பாண்டியன் கொடுக்க மறுத்ததால் தற்போது அரசிக்கு சீதனமாக கார் வாங்கிக் கொடுக்க வைத்திருந்த 10 லட்ச ரூபாய் பணம் பிரயோஜனம் இல்லாமல் மறுபடியும் வங்கியில் போடுவதற்கு செந்தில் கையில் கிடைத்திருக்கிறது. அந்த பணத்தை பார்த்ததும் செந்திலுக்கு பேராசை வந்து விட்டது, உடனே மீனாவிடம் சொல்லி இந்த பணத்தை மாமாவிடம் கொடுத்து வேலை வாங்கிடலாமா என்று கேட்கிறார்.
அதற்கு மீனா, இப்படி யோசிப்பதே தவறு இதை மனதில் இருந்து நீக்கி விடுங்க என்று சொல்லிவிடுகிறார். ஆனால் செந்தில், மீனா பேச்சை கேட்காமல் மாமனாரிடம் பணத்தை கொடுத்து விடுகிறார். இந்த விஷயம் மீனாவுக்கு தெரிய வந்த நிலையில் பாண்டியனிடமும் உண்மையை சொல்ல முடியாமல் மறைத்து விடுகிறார். ஆனால் இதுவரை மீனா தப்பு செய்த எல்லோருக்கும் ஆப்பு வைத்து சொக்கத்தங்கமாக இருந்தார்.
ஆனால் புருஷன் செய்த தவறை கண்டிக்க முடியாமல் அதை வெளியே சொல்லவும் முடியாமல் இரண்டு கிட்ட நிலைமையில் நிற்கிறார். அடுத்ததாக சக்திவேல் வீட்டிற்கு இன்கம் டேக்ஸ் ஆபிஸில் இருந்து வந்து பணத்தை எடுத்துட்டு போய் விடுகிறார்கள். வீட்டில் மட்டுமில்லாமல் மில், கடை போன்ற முத்துவேல் வைத்திருந்த எல்லா இடத்திற்கும் சென்று ரைடு நடத்திருக்கிறார்கள்.
இதனால் பாதிக்கப்பட்ட சக்திவேல் மற்றும் முத்துவேல் திடீரென்று ரெய்டு வருவதற்கான காரணம் என்ன என்று யோசிக்க போகிறார்கள். அப்பொழுது சுகன்யாவிடம் எதார்த்தமாக பேசிய பொழுது மீனாவிடம் சொன்ன விஷயம் முத்துவேல் மற்றும் சக்திவேலுக்கு தெரிய வரப்போகிறது. இதனால் இந்த ரைடு விவாகரத்தில் மீனா தான் போட்டுக் கொடுத்திருப்பார் என்று சக்திவேல் மற்றும் முத்துவேலு தெரிந்து கொள்வார்கள்.