மீனாவுக்கு வந்த சந்தேகம், அரசியை கூட்டிட்டு வரும் பழனிவேலு.. உதாசீனப்படுத்திய பாண்டியன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி திருட்டு கல்யாணம் பண்ணிட்டு வந்தது கஷ்டமாக இருந்தாலும் அந்த குமரவேலுவை நம்பி போனது தான் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது. எப்படியாவது ஒரு நல்லவன் கையில் அரசியை பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று கோமதி பாண்டியன் நினைத்தார்கள்.

ஆனால் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது என்பதற்கு ஏற்ப குமரவேலுடன் தற்போது அரிசி இருக்கும்படி ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது. ஆனால் பாண்டியன் நடந்த விஷயத்தை எதையும் மாற்ற முடியாது என்பதற்காக எல்லாத்தையும் மறந்து விட்டு அரசி செய்ததை உதாசீனப்படுத்தும் விதமாக கடைக்கு போய் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

அடுத்ததாக மீனாவுக்கு அரசி மீது ஏதோ சந்தேகம் வந்துவிட்டது. அந்த வகையில் பழனிவேலுவை தனியாக கூப்பிட்டு அரசியை நான் பார்த்து பேச வேண்டும். அதற்கு நீங்கள் தான் உதவி பண்ண வேண்டும் என்று சொல்கிறார். உடனே பழனிவேல் அரிசி மீது இருந்த கோபத்தினால் அவளை எல்லாம் பார்த்து பேச வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு மீனா எனக்கு இன்னமும் அரிசி மீது நம்பிக்கை இருக்கிறது. அரசி கல்யாணத்தில் ஏதோ எனக்கு சந்தேகம் இருக்கிறது என்று சொல்கிறார்.

அதனால் நீங்கள் எப்படியாவது அரசியை யாருக்கும் தெரியாமல் கோவிலுக்கு கூட்டிட்டு வந்து விடுங்கள். நானும் அங்கு வந்துவிடுகிறேன் என்று சொல்கிறார். அந்த வகையில் இப்பொழுதாவது அரசி, மீனாவிடம் நடந்து உண்மையை சொன்னால் அரசி வாழ்க்கைக்கு விடிவுகாலம் பிறக்கும். அடுத்ததாக சரவணன், தற்போது குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் தங்கமயில் பற்றி எதையும் சொல்லிக்க வேண்டாம் என்று முடிவு பண்ணி விட்டார்.

ஆனாலும் தங்கமயில் பண்ணியதை நினைத்து பீல் பண்ணும் சரவணன் கோபத்துடன், தங்கமயிலை கூட்டிட்டு அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போய் விடப் போகிறார்.