சுகன்யாவுக்கு மீனா கொடுத்த டிரீட்மென்ட்.. சைலன்டாக இருக்கும் பாண்டியன், கண்ணீர் வடிக்கும் மருமகள்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி செய்த துரோகத்தை தாங்க முடியாத பாண்டியன் குடித்துவிட்டு முதல் நாள் ஆர்ப்பாட்டம் பண்ணினார். ஆனால் அதன் பிறகு அந்த விஷயத்தை பற்றி பேசாமல் சைலண்டாக இருந்து அடுத்தடுத்து வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார். அதனால் கடைக்கு கிளம்பி போன பாண்டியனை நினைத்து கோமதி பீல் பண்ணுகிறார்.

உடனே செந்தில் கடைக்கு கிளம்பும்போது நானும் கூட வருகிறேன் என்று பிடிவாதமாக கோமதி கடைக்கு போய் விடுகிறார். கடைக்கு வந்த கோமதியை பார்த்து பாண்டியன் திட்டுகிறார். கோமதி நானும் உங்களுடன் தான் இருப்பேன் என்று சொல்லிய நிலையில் கடைக்கி பொருட்கள் வாங்க வந்தவர்கள் அரசி செய்த துரோகத்தை பற்றி பேசி பாண்டியனையும் கோமதியும் காயப்படுத்தி விட்டார்கள்.

அடுத்ததாக அரசிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த மீனா, நேரடியாக சுகன்யாவை பார்த்து நீங்களா என்ன ஜென்மம். உங்களுக்கு அரசி அப்படி என்ன கெடுதல் பண்ணினாள், நீங்கள் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அவளுடைய வாழ்க்கையை குழி தோண்டி புதைத்து விட்டீர்கள் என்று நல்ல நாலு கேள்வி கேட்டு விடுகிறார். சுகன்யா எதுவும் தெரியாத போல் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

ஆனால் மீனா, விடாமல் திட்டிய நிலையில் நான்தான் குமார் உடன் அனுப்பி வைத்ததற்கு என்ன ஆதாரம் என்று கேட்க ஆரம்பித்து விட்டார். உடனே மீனா உங்களிடம் மட்டும் ஆதாரத்தை காட்டவா, இல்லன்னா எல்லோரிடமும் காட்டவா என்று கேட்ட நிலையில் சுகன்யா ஆடிப் போய்விட்டார். உடனே எதுவுமே தெரியாத போல் நல்லவள் மாதிரி சுகன்யா, மீனாவிடம் டிராமா போட ஆரம்பித்துவிட்டார்.

ஆனால் மீனா இதையெல்லாம் நம்பக்கூடிய ஆள் இல்லை, அந்த வகையில் சுகன்யா செய்த சூழ்ச்சிக்கு மீனா பதிலடி கொடுக்கும் விதமாக லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். இந்த சுகன்யாவுக்கு இது போதாது இன்னும் வேணும் என்பதற்கேற்ப மீனா அடுத்தடுத்து சுகன்யாவை காயப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அடுத்ததாக சரவணன், விட்டு போனதை நினைத்து தங்கமயில் பீல் பண்ணி அழுகிறார்.

வழக்கம் போல் தங்கமயிலுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக பாக்கியம் சமாதானப்படுத்துகிறார். இன்னும் இரண்டு நாளில் மாப்பிள்ளை உன்னை கூட்டிட்டு போய்விடுவார் என்று சொல்லி கண்ணீர் வடிக்கும் பாண்டியனின் மருமகளுக்கு ஆறுதலாக இருக்கிறார்.