Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், அருண் சீதா லவ் பண்ணுகிறார்கள் என்று அருண் அம்மாவுக்கு தெரிந்ததும் முறைப்படி சீதாவின் வீட்டில் பேசுவதற்கு வந்து விடுகிறார். அப்படி வந்து பேசும் பொழுது இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கொண்டால் இவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று அருண் அம்மா சொல்கிறார்.
அதற்கு மீனாவின் அம்மா எங்க மாப்பிள்ளைக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயத்தையும் நாங்கள் பண்ண மாட்டோம். என்னுடைய மூத்த மாப்பிள்ளை தான் இந்த வீட்டிற்கு எல்லாம். அவருக்கு உங்க பையன் பிடிக்கவில்லை அதனால் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று தெளிவாக சொல்லிவிட்டார். அதனால் அவரை மீறி நாங்கள் எதையும் பண்ண மாட்டோம் என்று சொல்லி அருண் அம்மாவை வெளியே அனுப்பி வைத்து விடுகிறார்.
வெளியே காத்துக் கொண்டிருந்த அருனிடம், சீதாவின் அம்மா சொன்ன விஷயத்தை சொல்லிவிட்டு அருண் அம்மா அங்கு இருந்து கிளம்பி விடுகிறார். பிறகு வெளியே வந்த மீனாவிடம் அருண், சீதாவை எந்த அளவுக்கு காதலிக்கிறேன் என்பதை எடுத்து சொல்லும் விதமாக பேசுகிறார். நான் சீதாவை நல்லபடியாக பார்த்து சந்தோசமாக வைத்துக் கொள்வேன்.
சீதாவை மட்டும் இல்லாமல் உங்க குடும்பத்தை பற்றியும் சீதா எனக்கு சொல்லி இருக்கிறார். அதனால் உங்க குடும்பமும் என்னுடைய குடும்பமாக பார்த்து நான் துணையாக இருப்பேன் என்று பொறுப்பான மாப்பிள்ளையாக பேசுகிறார். இதை கேட்டதும் மீனாவும், எனக்கு என்னுடைய தங்கச்சி வாழ்க்கை தான் முக்கியம். அவள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
அதனால் அவள் ஆசைப்பட்ட விஷயத்தை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். அதே நேரத்தில் என்னுடைய வீட்டுக்காரரை எதிர்த்து எதையும் பண்ணவும் மாட்டோம். அவரை சமாதானப்படுத்தி எல்லோருடைய ஆசிர்வாதத்துடன் உங்களுடைய கல்யாணம் நடக்கும் என்று சொல்லிவிடுகிறார். பிறகு இதையெல்லாம் பார்த்து சீதா, முத்துவை சந்தித்து பேசுகிறார்.
அப்பொழுது அருண் ரொம்ப நல்லவர் நீங்கள் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க. நான் எடுத்த உடனே அருணை காதலிக்கவில்லை. அவர் எனக்கும் நம்ம குடும்பத்துக்கும் சரியாக இருப்பாரா என்று தெரிந்து கொண்ட பின்பு தான் நான் அவரை காதலிக்க ஆரம்பித்தேன். அதனால் எனக்கு அவருடன் கல்யாணம் நடந்தால் சந்தோஷமாக இருக்கும். அதே நேரத்தில் உங்கள் விருப்பம் இல்லாமல் எங்களுடைய கல்யாணமும் நடக்காது என்று தன்னுடைய காதலுக்காக முத்துவிடம் கெஞ்சுகிறார்.
ஆனால் முத்து பிடிவாதமாக எனக்கு அந்த அருண் பிடிக்கவில்லை உனக்கும் வேண்டாம். நான் நிச்சயமாக உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன். நீ இப்பொழுது வீட்டுக்கு போ என்று அனுப்பி வைத்து விடுகிறார். பிறகு மீனா வீட்டுக்கு வந்ததும் அருண் பேசின விஷயத்தை சொல்கிறார். அப்பொழுது கூட முத்து மனம் இறங்கவில்லை பிடிவாதமாகத் இந்த அருண் வேண்டாம் என்று சொல்கிறார்.
அடுத்ததாக மனோஜ் இன்னும் அவனுடைய அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு நம்மிடம் பேசாமல் இருக்கிறான். இவனை இப்படியே விட்டு விடக்கூடாது, நம்முடைய வழிக்கு கொண்டுட்டு வரவேண்டும் என்று முடிவு பண்ணிய ரோகிணி, மனோஜ் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது வெளியே மகேஷ் என்பவர் உடன் சும்மா பேசுவது போல் டிராமா பண்ணுகிறார்.
இதைப் பார்த்ததும் மனோஜும் பயப்பட ஆரம்பித்து விட்டார், எங்கே நம்மளை விட்டுவிட்டு வேறு யாருடையாவது போய்விடுவார் என்று பயத்தில் மனோஜ் பேச ஆரம்பித்து விடுவார். ஆனால் இந்த ரோகிணி தனக்கொரு விஷயம் நடக்க வேண்டும் என்றால் எந்த ஒரு கீழ் தனமான விஷயத்துக்கும் போவார் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் தான். இந்த மனோஜும் மறுபடியும் மறுபடியும் ரோகினிடம் ஏமாந்து கொண்டே இருக்கிறார்.