அருண் சீதா கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் முத்து.. புத்திசாலியான மீனா, மக்காக இருக்கும் விஜயா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதாவுக்கு எந்தவித டென்ஷனும் மன அழுத்தமும் கொடுக்கக் கூடாது. அப்படி தொடர்ந்து மன அழுத்தமாக இருந்தால் நெஞ்சு வலி வருவதற்கு வாய்ப்பு இருக்கு என்று டாக்டர், மீனா மற்றும் மீனாவின் அம்மாவிடம் சொல்லிவிட்டார். இதனால் பயந்து போன மீனா, மனசுல ஒருத்தர நினைச்சுட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ண முடியாது.

அதனால் அந்த தண்டனை சீதாவுக்கு நாம் கொடுக்க வேண்டாம், நீ தான் உன்னுடைய மூத்த மாப்பிள்ளைிடம் பேசி சீதா அருண் கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று மீனா சொல்லிவிட்டார். மீனாவின் அம்மாவிற்கும் வேறு வழியில்லை தன்னுடைய மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக முத்துவிடம் பேசுவதற்கு தயாராகி விட்டார்.

ஆனால் இது எதையும் புரிந்து கொள்ளாத முத்து, மீனாவிடம் கோபத்தை காட்டும் விதமாக வீட்டிற்கு வெளியில் இருந்து சாப்பாடு வாங்கிட்டு வந்து மீனாவை வெறுப்பேத்திக்கொண்டு சாப்பிடுகிறார். பிறகு அண்ணாமலை இடம் மீனா தரப்பில் இருக்கும் நியாயத்தையும் சொல்கிறார். உடனே முத்து, அருண் பற்றி தவறான விஷயங்களை எடுத்துச் சொல்கிறார்.

இதனால் அண்ணாமலை முத்துவிடம் உனக்கு சரி என்று தோன்றது மத்தவங்களுக்கு தப்பாக தெரியலாம். அதே மாதிரி உனக்கு தப்பு என்று தோன்ற விஷயம் மத்தவங்களுக்கு சரியாக இருக்கலாம். அதனால் சீதா விஷயத்தில் சீதா என்ன நினைக்கிறாரோ அதன்படி போகிறதான் நல்லது என்று சொல்லிவிடுகிறார். அடுத்தபடியாக சீதாவை ஹாஸ்பிடலில் பார்த்து பேசுவதற்காக முத்து மற்றும் மீனா வருகிறார்கள்.

அப்படி வரும் பொழுது அங்கே இன்னொரு பொண்ணு காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்திருக்கிறது. அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் கதறி அழுது பேசும்பொழுது முத்துவுக்கு உறுத்தல் ஆகிவிட்டது. மீனாவுக்கும் பயம் வந்த நிலையில் தன்னுடைய தங்கை வாழ்க்கை ரொம்ப முக்கியம் என்பதற்காக முத்துவிடம் கரராக பேசி விடுகிறார்.

அதனால் முத்துவும் யோசித்துப் பார்த்து சீதா அருண் கல்யாணத்திற்கு சம்மதம் கொடுத்து விடுகிறார். அடுத்ததாக மனோஜ் வாய் பேச முடியாததால் ரோகினி டப்பிங் கொடுத்து விஜயாவை மக்காக ஏமாற்றி வருகிறார். விஜயாவும் ரோகிணி சொல்வதை நம்பி ஷோரூமுக்கு அனுப்பி வைக்கிறார்.