Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து சீதாவை சந்தித்து உனக்கு எந்த மாதிரியான மாப்பிள்ளை வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஏற்ற மாதிரி நான் மாப்பிள்ளையை தேடி கொண்டு வருவேன் என கேட்கிறார். உடனே சீதா, மனதில் அருணை நினைத்துக் கவர்மெண்ட் மாப்பிள்ளை ஆக இருக்க வேண்டும், வீட்டிற்கு ஒரே பையனாகவும் இருக்க வேண்டும் என்று சொல்லிவிடுகிறார்.
உடனே வீட்டிற்கு வந்த முத்து, மீனாவை கூப்பிட்டு சீதாவிடம் உனக்கு எந்த மாதிரியான மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டேன். அதற்கு சீதாவும் மனசில் இருக்கும் ஆசையை சொல்லும் விதமாக இரண்டு கண்டிஷன் போட்டிருக்கிறார். ஒன்று கவர்மெண்ட் வேலை பார்க்க வேண்டும், இன்னொன்று வீட்டிற்கு ஒரே பையன் ஆகவும் இருக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்.
அதனால் இனி அப்படிப்பட்ட மாப்பிள்ளையே தேட நான் தயாராகி விட்டேன் என்று முத்து, மீனாவிடம் சொல்கிறார். அதற்கு மீனா, சீதா என்ன சொல்லி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளாமல் வழக்கம்போல் நீங்களா ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். சீதா சொன்ன விஷயம் அனைத்தும் அருணை மனதில் வைத்து தான், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்று முத்துவிடம் வாக்குவாதம் பண்ணுகிறார்.
முத்து அதெல்லாம் இல்லை சீதா, அருணை ஞாபகம் வச்சு சொல்லவில்லை. நீ என்னுடன் கிளம்பி வா சீதாவிடம் கேட்கலாம் என்று வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். அங்கே வேலை முடித்து வந்த சீதாவிடம் நீ எனக்கு போட்ட கண்டிஷன் அருணை மனதில் வைத்து தானா என்று கேட்கிறார். அதற்கு சீதா யோசித்த நிலையில் மீனா சைகை மூலம் ஓபனாக சொல்லு என சொல்கிறார்.
அதன்படி சீதாவும், அருணை மனதில் வைத்து தான் உங்களிடம் சொன்னேன் மாமா என சொல்லி விடுகிறார். இதை கேட்டதும் எதுவும் பேச முடியாமல் முத்து வாயடைத்து போய்விடுகிறார். அடுத்ததாக ரோகிணி, 2 லட்ச ரூபாய் பணத்திற்காக என்ன பண்ணுவது என்று தெரியாமல் சுருதியின் அம்மா வீட்டுக்கு போகிறார். அங்கே போனதும் சுருதியின் அம்மாவிடம் உதவியாக 2 லட்ச ரூபாய் பணம் வேண்டும். நான் ஒரு மாதத்திற்குள் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று சொல்கிறார்.
இதை சுருதி அப்பாவிடம் சொல்லிய நிலையில் ரோகிணி மூலமாகத்தான் ரவி சுருதியை அந்த குடும்பத்தில் இருந்து பிரித்து நம் வீட்டிற்கு கூட்டிட்டு வர முடியும். அதனால் ரோகிணி மாதிரியான ஒரு ஆள் நம் கைவசம் இருக்க வேண்டும். அந்த வகையில் ரோகிணி கேட்டபடி 2 லட்சம் பணத்தை கொடு என்று ஸ்ருதி அப்பா சொல்லி விடுகிறார். உடனே சுருதி அம்மாவும் 2 லட்சம் ரூபாய் பணம் தருகிறேன் என்று சொல்கிறார்.
இதன் மூலம் ரோகினிடம் டீல் போடும் விதமாக நான் கொடுக்கும் பணத்திற்கு நீ, சுருதி ரவியை அந்த குடும்பத்திலிருந்து பிரித்து எங்க குடும்பத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று டீல் போட போகிறார். ரோகிணி பொருத்தவரை சுயநலமாக யோசித்து தன்னுடைய வாழ்க்கைக்கு எந்த வேலையினாலும் பண்ணக்கூடிய ஆளுதான். அதனால் ஸ்ருதி அம்மா சொன்னபடி டீலுக்கு ஓகே சொல்லி விடுவார்.
அடுத்ததாக முத்து, சீதா சொன்னதை யோசித்துப் பார்க்கிறார். சீதா வாழ்க்கையில் நாம் தலையிட முடியாது. அவர்களுடைய வாழ்க்கை அவங்க கையில தான் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்து நேராக சீதாவை சந்தித்து பேசுகிறார். அப்பொழுது நீ சொன்னபடி மாப்பிள்ளை அமைந்துவிட்டது என்று சொல்கிறார். உடனே மீனாவின் அம்மா, அப்படியா மாப்பிள்ளை அப்படி என்றால் அவங்களை வீட்டுக்கு வர சொல்லுங்க என சொல்கிறார்.
அதற்கு முத்து, நான் சொல்ல முடியாது சீதா தான் சொல்லணும் என்று அருணை வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்க சொல்லு. முறைப்படி உனக்கு அருணுக்கும் கல்யாணத்தை பண்ணலாம் என்று சீதாவின் காதலுக்கு பச்சைக்கொடி கட்டி விடுகிறார். இதை கேட்டதும் சீதா சந்தோசத்தில் அருணுக்கு இந்த விஷயத்தை போன் பண்ணி சொல்கிறார்.