Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், தான் சொல்வது தான் சரி, தான் என்ன பண்ணாலும் சரியாகத்தான் இருக்கும் என்று ஓவர் தெனாவட்டில் முத்து அராஜகம் செய்து வருகிறார். தன்னுடைய குடும்பத்தை கண்ட்ரோல் பண்ண முடியாத முத்து, மாமியார் வீட்டு குடும்பத்தை ஆட்டி படைக்க வேண்டும் என்று அதிகாரம் பண்ணி வருகிறார்.
முத்துவுக்கும் அருணுக்கும் பிரச்சினை ஏற்பட்டதால் சீதா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். சீதாக்கும் அருணுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது, ஒருத்தரை ஒருத்தர் மனதார விரும்புகிறார்கள் என்று தெரிந்தும் முத்து, வரட்டு கௌரவத்தால் மாமியாரை வீட்டில் ஆணாதிக்கம் செய்து வருகிறார். பாவம் இதில் மாட்டிக் கொண்டு முழிப்பது மீனாவின் குடும்பம் தான்.
சீதா எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று மீனா, மீனாவின் அம்மா, சத்தியா அனைவரும் நம்புகிறார்கள். ஆனாலும் வீட்டிற்கு மூத்த மருமகனாக இருக்கும் முத்துவை பகைத்துக் கொண்டு சீதாவின் கல்யாணத்தை நடத்த முடியாது என்பதற்காக மீனாவின் அம்மா, சீதாவின் காதலை வேண்டாம் என்று சொல்கிறார்.
இதனால் மனதில் நினைத்த அருணை மறக்க முடியாமல், மனவேதனையில் சீதாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. சீதாவுக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்த அருண், அம்மாவை கூப்பிட்டு ஹாஸ்பிடலுக்கு பார்க்க வருகிறார். அங்கே இருக்கும் முத்து, அருணை தேவை இல்லாமல் சீண்டி விட்டு அடிப்பதற்கு கை ஓங்கி அராஜகம் பண்ணி விட்டார்.
இதனை தட்டி கேட்ட மீனாவிடம் இப்ப வந்த அருண் உங்க குடும்பத்திற்கு ரொம்ப முக்கியமாக போய்விட்டதா, அப்படி என்றால் நான் இருக்க தேவையில்லை என்று சொல்லி வீராசமாக கிளம்பி விட்டார். எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தான் ஆணாதிக்கம் பண்ணுகிறார் என்று பார்த்தால் அவரை விட முத்து ஓவராகவே அதிகாரம் பண்ணி எல்லாத்தையும் ஆட்டி படைக்கிறார்.
இவரை ஒப்பிட்டு பார்க்கும்போது அந்த குணசேகரன் எவ்வளவோ பரவாயில்லை என்பது போல் தோன்றுகிறது. பாவம் இந்த முத்துவிடம் மாட்டிக்கொண்டு மீனாவின் குடும்பம் தத்தளித்துக் கொண்டு வருகிறது. அடுத்ததாக மனோஜ், சீதாவை பற்றி தவறாக பேசியதால் முத்து அடித்து விட்டார். இதனால் மனோஜ் வாயை திறக்க முடியாத அளவிற்கு ஒட்டு போட்டு விட்டார்கள். தற்போது மனோஜ் பேசுவதற்கு டப்பிங் ரோகிணி தான் கொடுக்கிறார்.
இதுதான் சான்ஸ் என்று மனோஜ் சொல்லாத எல்லாம் சொன்னதாக சொல்லி விஜயாவிடம் காரியத்தை சாதிக்க பார்க்கிறார். அந்த வகையில் ஷோரூமுக்கு போவதற்கு ரோகிணி பிளான் பண்ணிவிட்டார். மனோஜும் ரோகினி தன்னை விட்டு போகிற கூடாது என்பதற்காக ரோஹினி என்ன சொன்னாலும் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார். இதனால் விஜயாவை ஏமாற்றி ரோகிணி நெனச்சதை சாதிக்கிறார்.