Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி விஜயாவிடம் கொடுத்த திருட்டு செயினுக்கு பதிலாக ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். இதனால் ரோகிணி மனோஜ்க்கு இடையே விரிசல் ஆரம்பித்த நிலையில் விஜயா, ரோகிணி ரூமில் இருந்து மனோஜை அவருடைய ரூமுக்கு கூட்டிட்டு போய்விடுகிறார்.
இதனால் கடுப்பான ரோகினி, எப்படியாவது விஜயாவிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். அடுத்ததாக சுருதி ஆரம்பிக்கப் போகும் ரெஸ்டாரண்டில் ரவிக்கு விருப்பமில்லாமல் இருப்பதால் ரவிக்கும் சுருதிக்கும் வாக்குவாதம் ஆகிறது. இருந்தாலும் சண்டைக்கு பிறகு சமாதானம் என்பதற்கு ஏற்ப ரவி சுருதி சமரசம் ஆகி விடுகிறார்கள்.
அடுத்ததாக மீனாவிடம் சுருதி ஒரு உதவி கேட்டு ரவிக்கு எந்த கலர் ரொம்ப பிடிக்கும் என்பதை கேட்டு சொல்கிறார். அதன்படி மீனாவும், ரவியிடம் நைசாக பேசி பிடித்த கலரை தெரிந்து கொள்கிறார். இந்த கலரையே ரெஸ்டாரண்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்று சுருதி முடிவு எடுத்து விடுகிறார். அடுத்ததாக சீதாவிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்பதற்காக முத்து தரகர் மூலம் ஏற்பாடு பண்ணுகிறார்.
அந்த வகையில் ஒரு ஜாதகம் சீதாவிற்கு நன்றாக செட் ஆகிவிட்டது என்று முத்துவை வர சொல்லிய நிலையில் அந்த ஜாதகம் அருண் உடையது என்று முத்துவுக்கு புரிகிறது. உடனே கோபப்பட்டு இந்த ஜாதகம் வேண்டாம் என்று முத்து உதாசீனப்படுத்தி விடுகிறார். அடுத்ததாக முத்துவை தேடி ஒரு நபர் வந்து கார் ஓட்டுவதாகவும் என்னுடைய பையன் வெளிநாட்டில் நல்ல படித்து வேலையில் இருப்பதாகவும் சொல்கிறார்.
அவனுக்கு இப்பொழுது பொண்ணு பார்க்கிறேன், நீயும் உன்னுடைய மச்சினிச்சிக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக கேள்விப்பட்டேன். அதனால் இரண்டு பேரும் சம்மதம் பேசிக் கொள்ளலாமா என்பதை தெரிந்து கொள்ள வந்தேன் என்று சொல்கிறார். அந்த சமயத்தில் நபருடன் வந்த ஒருவர் சீதா அருண் காதல் விஷயத்தை சொல்லி இந்த கல்யாணம் வேண்டாம் என்று தடுத்து விடுகிறார்.
உடனே முத்துவை பார்த்து அந்த நபரும் சீதா காதல் விஷயத்தை சொல்லி இந்த சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இதனால் முத்து, சீதாவுக்கு மாப்பிள்ளை பார்க்க முடியாமல் ஒவ்வொரு விஷயத்திலும் தோற்றுப் போய் வருகிறார். முக்கியமாக சீதாவுக்கு மீனா கல்யாணம் பண்ணி வைத்து விட்டார் என்று தெரியாமல் முத்து தொடர்ந்து அவமானத்தையும் சந்தித்து வருகிறார்.
அடுத்ததாக மனோஜ் மற்றும் ரோகினி ஷோரூம் கிளம்பிய நிலையில் விஜயா பணத்தை கேட்டு கோபமாக பேசுகிறார். அதற்கு ரோகிணி இன்னும் ஒரு வாரத்தில் பணம் கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறார். அந்த சமயத்தில் வித்தியா, ரோகினிக்கு போன் பண்ணி பணம் விஷயமாக உன்னிடம் பேச வேண்டும் வீட்டிற்கு வா என்று கூப்பிடுகிறார்.
அப்படி போனதும் முருகனிடம் நீ எனக்கு தெரியாமல் பணம் கேட்டது தவறு, உன் இஷ்டத்துக்கு எல்லாம் பணத்தை கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது. எங்களுக்குள் இன்னும் கல்யாணமே ஆகவில்லை, ஆனால் நீ எந்த உரிமையில் அவரிடம் பணம் கேட்கிறாய். அவர் வைத்திருக்கும் பணம் எங்களுடைய சந்தோசத்திற்காக வீடு வாங்க வேண்டும் என்பதற்காக.
ஆனா நீ அதைப் பற்றி யோசிக்காமல் உன்னுடைய சுயநலத்திற்காக அவரை பயன்படுத்துகிறாயா என்று ரோகிணியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் விதமாக பேசி ஒரேடியாக தலைமுழுகி விட்டார். அத்துடன் ஏற்கனவே முருகனிடம் ஒரு லட்ச ரூபாய் வாங்கின பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவித்து இருந்த ரோகினி, ஸ்ருதியிடம் பணம் கேட்கலாம் என்று இரண்டு லட்ச ரூபாய் பணம் வேணும் என கேட்கிறார்.
ஆனால் சுருதி இப்பொழுது என்னிடம் பணம் இல்லை எல்லா பணத்தையும் ஹோட்டல் ஆரம்பிப்பதற்காக செலவு செய்து வருகிறேன் என்று சொல்கிறார். உடனே ரோகிணி, இதுவே மீனா உங்களிடம் பணம் கேட்டால் கொடுத்து இருப்பிங்க தானே என்று கேட்கிறார். அதற்கு ஸ்ருதி கொடுத்த பதிலடி, நீங்களும் மீனாவும் ஒன்று கிடையாது. மீனா உங்களை மாதிரி பொய் சொல்லி யாரையும் ஏமாற்ற மாட்டாங்க.
மாமியாரை ஐஸ் வைக்க வேண்டும் என்பதற்காக செயின் வாங்கி கொடுக்கவும் மாட்டாங்க, பிறகு அதற்கான பணத்தையும் அத்தை கேட்டிருந்தால் ஒரேடியாக கொடுக்க முடியாது என்று சொல்லி இருப்பாங்க. உங்களை மாதிரி அவங்க கிடையாது, என்று ரோகினியை அசிங்கப்படுத்தும் விதமாக சுருதி சரியான பதிலடி கொடுத்து விடுகிறார்.