Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற அரசி, முட்டாள்தனமாக தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு குமரவேலுவின் கையைப் பிடித்து விட்டார். இதை எதிர்பார்க்காத பாண்டியன் எதுவும் பேச முடியாமல் அவமானத்தில் தலை குனிந்து நிற்கிறார்.
அத்துடன் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோரும் அரசி செய்ததை நினைத்து வருத்தப்படுகிறார்கள். ஆனால் பாண்டியன் மட்டும் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார். உடனே எல்லோரும் எங்கே போகிறீர்கள் என்று கேட்ட போது எதுவும் பேசாமல் போய்விடுகிறார். இதனால் பயந்து போன பிள்ளைகள், அப்பா பின்னாடியே போகலாம் என்ற கிளம்புகிறார்கள்.
ஆனால் கோமதி அதெல்லாம் யாரும் போக வேண்டாம். உங்க அப்பாக்கு வீட்டில் நிம்மதி இல்லை, அதனால் வெளியே போறாங்க என்ற அரசி செய்ததை நினைத்து பீல் பண்ணி பேசுகிறார். இன்னொரு பக்கம் குமரவேலு என்ன நடந்தது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சக்திவேல் குமரவேலு செய்த காரியத்துக்கு சந்தோஷப்பட்டு போனில் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது அங்கே வந்த முத்துவேல், குமரவேலுவை திட்டி அடித்து விடுவாரோ என்ற பயத்தில் தெரியாமல் குமரவேலு ஏதோ பண்ணி விட்டான். அதற்காக அவனை அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடாதீர்கள் என்று சொல்கிறார். ஆனால் முத்துவேலு நீ செஞ்சதிலேயே உருப்படியான விஷயம் இதுதான்.
எப்படி என்னுடைய மகள் வீட்டை விட்டு போன பொழுது நான் தலை குனிந்து நின்றனோ, இதே மாதிரி அந்த பாண்டியனும் கூனி குறுகிப்போய் நின்றதை பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது என்று சொல்லி குமரவேலுவை பாராட்டுகிறார். ஆனால் குமரவேலு என்ன நடந்தது என்று தெரியாமல் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்.
இதெல்லாம் தாண்டி அரசி செய்தது ஏற்றுக்கொள்ள முடியாததாக தான் இருக்கிறது. நடந்த உண்மையை சொல்லி இருந்தால் அப்பொழுது அடியோ திட்டு வாங்கிக்கொண்டு பாண்டியன் வீட்டில் பாண்டியனின் மகளாகாது இருந்திருப்பார். அட்லீஸ்ட் சதீஷ், அரசியை புரிந்து கொண்டு கல்யாணம் பண்ணி இருப்பார். ஆனால் அதெல்லாம் விட்டு இந்த வீணா போன குமரவேலுவை நம்பி தனக்கு தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டார்.