மறுபடியும் பொண்ணு பார்க்க சேரனை கூட்டிட்டு போகும் நிலா.. துணையாக நிற்கும் அய்யனார்

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரனுக்கு பார்த்த பொண்ணு செட் ஆகவில்லை என்பதால் வேறு ஒரு பெண்ணை பார்க்கலாம் என்று நிலா மறுபடியும் மேட்ரிமோனியில் பார்த்தார். அப்படி பார்த்த பொழுது இன்னொரு பொண்ணு சேரனுக்கு ஏற்ற மாதிரி இருக்கிறது என்று நிலா, சோழனிடம் சொல்கிறார்.

உடனே அந்த பெண்ணை பார்த்து பேசலாம் என்று நிலா முடிவு பண்ணி விட்டார். ஆனால் இந்த விஷயத்தை சேரனிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் நிலா இருந்த பொழுது பல்லவன் பாண்டியன் மற்றும் சோழன் ஒவ்வொரு காரணத்தை சேரனிடம் சொல்லி பொண்ணு பார்ப்பதற்கு சம்மதத்தை கேட்கிறார்கள்.

அதற்கு சேரன் ஏற்கனவே பார்த்த பொண்ணு என்ன ஆச்சு என்று கேட்ட பொழுது அந்த பொண்ணு ரொம்பவே கோபக்காரி. உனக்கு சரிப்பட்டு வராது என்று அது வேண்டாம் என முடிவு பண்ணி விட்டதாக சோழன் சொல்கிறார். இதை நம்பாமல் இருந்த பொழுது நிலாவும், சேரனிடம் சோழன் சொன்னது உண்மைதான் என்று சொல்லிவிடுகிறார்.

அந்த வகையில் சேரன் இதை நம்பியும் நம்பாமலும் வேலைக்கு கிளம்பிவிட்டார். பிறகு எப்படியாவது இந்த பெண்ணை பார்த்து சம்மதம் தெரிவிக்க வைக்க வேண்டும் என்று சோழனிடம் எல்லோரும் பேசுகிறார்கள். அப்பொழுது நிலாவும் கேட்டதால் சேரன் பொண்ணு பார்ப்பதற்கு ஓகே சொல்லி விடுகிறார். ஆனால் இந்த முறை வீட்டிற்கு பொண்ணு பார்க்க வேண்டாம். ஏதாவது காபி ஷாப்புக்கு பொண்ணை வரவழைத்து பார்க்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள்.

அந்த வகையில் அனைவரும் சேர்ந்து சேரனை கூட்டிட்டு காபி ஷாப்புக்கு போகிறார்கள். இதற்கிடையில் நிலா கோவிலுக்கு வந்த பொழுது கார்த்திகாவும் நிலாவும் பேசி கொள்கிறார்கள். இதை பார்த்த கார்த்திகாவின் அம்மா நிலாவிடம் சண்டை போடுகிறார். ஆனால் நிலா,சோழன் குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் என்னுடைய குடும்பம் உங்க குடும்பத்தை விட சூப்பர். அவங்களை மாதிரி நல்லவங்க கிடையாது என்பதற்கு ஏற்ற மாதிரி சப்போர்ட்டாக பேசுகிறார்.

அந்த வகையில் இதுவரை யாருமில்லாமல் அந்த ஊரில் அவமானப்பட்டு இருந்த சோழன் குடும்பம் நிலா வந்த பிறகு அந்த வீட்டை காக்கும் காவல் தெய்வமாக நிற்கிறார். அதனால் நிலா தான் அய்யனார் மாதிரி எல்லா பிரச்சினையும் சரி செய்து அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் கரை சேர்க்கப் போகிறார்.