Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், கார்த்திகா கல்யாணத்துக்கு வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் நிலா, சேரன் மனசை மாற்றி கோவிலுக்கு கூட்டிட்டு வந்து விட்டார். அண்ணனுக்கு இந்த முறை எப்படியும் கல்யாணம் ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் சோழன் பல்லவன் பாண்டியனும் ஆசையுடன் கோயில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நேரம் ஆக ஆக நிலாவுக்கு ஒரு பதட்டம் வந்த நிலையில் கார்த்திகாவுக்கு போன் பண்ணுகிறார். கார்த்திகாவும் நான் தயாராகி விட்டேன் இப்பொழுது வந்து விடுவேன் என்று சொல்கிறார். ஆனால் நிலா, கார்த்திகாவிடம் வரும்பொழுது சர்டிபிகேட் எடுத்துட்டு வா என்று சொல்லியதால் அதையும் எடுத்துட்டு கிளம்புகிறார். ஆனால் இதைப் பார்த்த கார்த்திகாவின் அம்மாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
அத்துடன் கையில் சர்டிபிகேட்டையும் வைத்திருப்பதால் எங்கே போகிறாய் என்று அதட்டி கேட்டதும் கார்த்திகா, எனக்காக சேரன் மாமா கோவிலில் காத்துக் கொண்டிருக்கிறார். எனக்கும் அவருக்கும் தற்போது கல்யாணம் நடக்கப் போகிறது என்று சொல்லி விடுகிறார். உடனே கார்த்திக் அம்மா, கார்த்திகாவை போக விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக தூக்கு மாத்திரை எடுத்துட்டு சாப்பிட போய் விடுகிறார்.
அதை தடுக்கும் பொருட்டாக கார்த்திகா நான் எங்கேயும் போகவில்லை என்று வீட்டிற்கு வெளியே அழுது புலம்புகிறார். பிறகு கார்த்திகா வருவா என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்த நிலாவின் குடும்பம் கடைசியில் ஏமாறும்படி ஆகிவிட்டது. கோவிலில் நடை சாத்தும் நேரம் வந்து விட்டதால் அங்கு இருந்த பூசாரியும் நேரமாகிவிட்டது என்று சொல்லி தாலி கயிறை சேரன் கையில் கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறார்.
இதையெல்லாம் பார்த்த நிலா என்னால் தான் நீங்கள் இந்த அளவிற்கு கஷ்டப்படும்படி ஆகிவிட்டது என்று சொல்லி அழுகிறார். ஆனால் சேரன் எதுவும் பேச முடியாமல் அவமானப்பட்டு கோவிலில் இருந்து வீட்டிற்கு போய்விடுகிறார். பின்னாடியே நிலா, சோழன் பாண்டியன் பல்லவனும் வருத்தப்பட்டு போகிறார்கள். அந்த வகையில் இனி சேரனுக்கு ஜோடியாக கார்த்திகா இல்லை என்று உறுதியாகிவிட்டது. சேரனுக்கு பிடித்த மாதிரி இன்னொரு பொண்ணு கூடிய சீக்கிரத்தில் எண்டரி கொடுக்கப் போகிறது.