Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று நிலா முடிவெடுத்து இருக்கிறார். அதனால் மேட்ரிமோனியில் பதிந்து வைத்து ஒரு பொண்ணு பார்த்தார். ஆனால் சேரனின் பேச்சு அந்த பொண்ணுக்கு பிடிக்காததால் நிலாவுக்கு போன் பண்ணி இந்த சம்பந்தம் எனக்கு வேண்டாம் என்று அந்த பொண்ணு சொல்லிவிட்டது.
இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த நிலா, சேரனுக்கு பிடித்த மாதிரியும் சேரனை விரும்பும் கார்த்திகாவையும் சேர்த்து வைத்து விடலாம் என்று முடிவு பண்ணி விட்டார். அந்த வகையில் கார்த்திகாவின் வீட்டிற்கு நிலா தனியாக சென்று கல்யாணத்தைப் பற்றி பேசினார். ஆனால் கார்த்திகாவின் அம்மா நிலாவை திட்டி வெளிய அனுப்பி விடுகிறார்.
ஆனாலும் நிலா இதற்கெல்லாம் அசராமல் பாண்டியன் பல்லவன் சோழனை கூட்டிட்டு முறையாக பொண்ணு கேட்டு போய் விட்டார்கள். இவர்களை பார்த்ததும் கார்த்திகாவின் அம்மா அப்பா மற்றும் மாமா அனைவரும் சேர்ந்து பிரச்சினையை பெருசாக்கி வந்தவர்களை அவமானப்படுத்தி விட்டார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நடேசன் எதற்கு தேவையில்லாமல் அந்த குடும்பத்தின் வாசலில் போய் நிற்க வேண்டும் என்று திட்டுகிறார்.
அத்துடன் சேரனும் வீட்டிற்கு வந்து தம்பிகளை திட்டிவிட்டு சோகமாக உட்கார்ந்து இருக்கிறார். அப்பொழுது நிலா இதற்கெல்லாம் காரணம் நான் தான். என் மீது தவறு இருக்கிறது, என்னை மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்கிறார். அதற்கு சேரன், இந்த ஊரே எங்களை மதிக்காமல் அவமானப்படுத்தி பேசுகிறார்கள். இதனால் நாங்கள் பல கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறோம்.
அதெல்லாம் சரி செய்யும் விதமாக நீ எங்களை நம்பி எங்க வீட்டில் இருப்பதே எங்களுக்கு பெரிய விஷயம். இது போதும் இதைவிட எங்களுக்கு வேற எந்த சந்தோசமும் வேண்டாம். எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்த நீ யாருக்காகவும் எதுக்காகவும் அவமானப்பட்டு நிற்க கூடாது என்று சேரன், நிலாவிடம் சொல்கிறார். சோழனும் இதையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் கனவு நோக்கி முயற்சி எடுத்து அதில் வெற்றி அடைய பாருங்கள் என்று அட்வைஸ் பண்ணுகிறார்.
நிலாவும் சோழன் சொன்னதை கேட்டு சிரித்து கொள்கிறார். அடுத்ததாக நிலா மற்றும் கார்த்திகா இருவரும் கோவிலில் சந்தித்து பேசும்போது கார்த்திகா என்னால் சேரனை மறந்து வேறு ஒருவரை கல்யாணம் பண்ண முடியாது என்று பீல் பண்ணி சொல்லுகிறார். அதற்கு நிலா எடுத்த முடிவு என்னவென்றால் நாளைக்கு நீங்கள் இந்த கோவிலுக்கு வந்து விடுங்கள்.
நாங்களும் சேரனை கூட்டிட்டு இங்கே வந்து விடுகிறோம். வந்ததும் உங்களுக்கும் சேரன் அண்ணனுக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கிறோம் என்று சொல்கிறார். கார்த்திகாவும் சரி என்று சொல்லிய நிலையில் நிச்சயம் இந்த திருட்டு கல்யாணத்துக்கு சேரன் சம்மதிக்காமல் சொதப்புவார். பிறகு எல்லோரும் எடுத்து சொல்லி சேரன் மனதை மாற்றி கார்த்திகாவுடன் கல்யாணத்தை பண்ணி வைத்து விடுவார்கள்.