ஜெயிலுக்கு போகும் நித்தீஷ், பாக்யாவுக்கு தெரிந்த உண்மை.. இனியா மூலம் கோபிக்கு பதிலடி கொடுத்த கர்மா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவின் கணவர் போ**தை பழக்கத்திற்கு அடிமையாகி ஜெயிலுக்கு போயிட்டு வந்தவர் என்ற உண்மை கோபிக்கு தெரிந்து விட்டது. அதனால் இனியாவை தன்னுடன் கூட்டிட்டு போகலாம் என்று முடிவு எடுத்தார். ஆனால் இனியா, நான் உங்களுடன் வந்து விட்டால் பாட்டிக்கும் அம்மாவுக்கும் எல்லா உண்மையும் தெரிந்துவிடும்.

அவங்களால் தாங்கிக் கொள்ள முடியாது, அதனால் நான் இங்கே இருக்கிறேன். ஒருவேளை எனக்கு இங்கே ஏதாவது பிரச்சினை என்றால் நான் உங்களிடம் சொல்கிறேன். அப்போது வந்து என்னை கூட்டிட்டு போங்கள் என்று சொல்லிவிடுகிறார். ஆனாலும் மனசு கேட்காமல் கோபி, இனியாவை ஆபீஸில் கூட்டிட்டு போய் விடுகிறேன் என்று சொல்லி சுதாகர் வீட்டிற்கு வந்து இனியவை கூட்டிட்டு கிளம்புகிறார்.

அப்படி கிளம்பும் பொழுது நித்தீஷ், கோபியை பார்த்து எதுவும் பேசாமல் போனதால் வருத்தப்பட்டு இனியாவிடம் மாப்பிள்ளை ஏன், என் மீது கோபமாக இருக்கிறார். நான் தான் அவர் மீது கோபப்படனும், நான் மதிப்பும் மரியாதையும் கொடுத்து அன்பாகத்தானே பேசுகிறேன். ஒரு பார்வை பார்த்து சிரித்து எப்படி இருக்கீங்க என்று கூட கேட்க மாட்டார் என பீல் பண்ணி இனியாவிடம் சொல்கிறார்.

உடனே இனியா, நீங்க என்ன பண்ணினீங்களோ அதுதான் இப்பொழுது உங்களுக்கு திருப்பி கிடைக்கிறது. அம்மா வீட்டில் இருந்து பாட்டி அத்தை என யாராவது வந்தாங்கன்னா அவங்களிடம் நீங்கள் இப்படித்தான் நடந்து கொள்வீர்கள். முகம் கொடுத்து கூட பேச மாட்டீங்க சிரிக்க மாட்டீங்க. இதை எத்தனையோ தடவை பாட்டி, அம்மாவிடம் சொல்லி ரொம்ப பீல் பண்ணி இருக்காங்க.

அப்பொழுது அவர்களுக்கு இருக்க கஷ்டம் தான் இப்பொழுது நீங்க படுறீங்க, எப்பொழுதுமே செஞ்ச வினை திருப்பிக் கொடுக்கும் என்பதற்கு இது தான் பதில் என்று இனியா, கோபி செஞ்ச தவறை புரிய வைத்து விடுகிறார். அடுத்ததாக ஆபீஸ் முடித்துவிட்டு இனியா, பாக்யாவை சந்திப்பதற்காக ஹோட்டலுக்கு போகிறார். அங்கே எதிர்பார்த்தபடி லாபம் இல்லை என்றதும் இனியா என்னிடம் இன்னொரு ஐடியா இருக்கிறது என்று சொல்லி ஒரு 5 ஸ்டார் ஹோட்டலுக்கு செல்வியும் பாக்யாவையும் கூட்டிட்டு போகிறார்.

அதாவது அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு செப் தேவைப்படுகிறது, அதனால் பாக்கியம் மற்றும் செல்வி அங்கே மேனேஜ் பண்ணுவதற்காக இன்டர்வியூக்கு ரெஸ்யூம் கொடுக்க கூட்டிட்டு போயிருக்கிறார். ஆனால் பாக்யாவை பார்த்ததும் அங்கு இருப்பவர்கள் ஏளனமாக பேசி இன்டர்வியூக்கு கூப்பிடுகிறோம். இப்பொழுது நீங்கள் கிளம்பலாம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதனை தொடர்ந்து இன்டர்வியூக்கு போன் வந்ததும் பாக்கியம் மட்டும் ஹோட்டலுக்கு கிளம்பி போகிறார்.

அப்படி போனதும் அங்கே சில நபர்கள் போ**தை பழக்கத்தில் அடிமையாகி இருக்கிறார்கள் என்று போலீஸ்க்கு தகவல் வந்ததால் போலீஸ் அந்த ஹோட்டலுக்கு வந்து போ*தை பழக்கத்தில் இருந்தவர்களை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகிறார்கள். அதில் ஒரு நபராக நித்தீஷ் இருக்கிறார், அங்கே வந்த பாக்கியா, நித்தேஷை பார்த்து அதிர்ச்சியாகி விடுகிறார். பிறகு போலீஸ் ஜிப்பில் நித்திசை கூட்டிட்டு போனதும் பாக்யா என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.

பிறகு அங்கு இருப்பவர்களிடம் என்ன பிரச்சனை என்று கேட்டதும் பாக்யா அதிர்ச்சியாகி விடுகிறார். கோபிக்கு மட்டும் தெரிந்த உண்மை தற்போது பாக்யாவுக்கும் தெரிந்து விட்டது. இதனால் நிச்சயம் இனியாவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக கோபி மற்றும் பாக்யா அதிரடியான முடிவை எடுப்பார்கள்.