கதிரை திட்டி அவமானப்படுத்தும் பாண்டியன்.. செந்திலுக்காக பணத்தைக் கொடுக்கும் மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி காலேஜ் படிப்பை முடித்து நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணி விட்டதால் அடுத்து டார்கெட் போலீஸ் ஆக வேண்டும் என்பதில் கதிர் குறிக்கோளாக இருக்கிறார். அதனால் ராஜியை கூட்டிட்டு போலீஸ் எக்ஸாமில் பாஸ் பண்ண வேண்டும் என்பதற்காக கோச்சிங் கிளாஸில் சேர்த்து விடுகிறார்.

ஆனால் ராஜி இதற்கு எவ்வளவு பணம் செலவானது என்று கேட்ட பொழுது 40 ஆயிரம் ரூபாய் என்று கதிர் சொல்கிறார். அதற்கு ராஜி அவ்வளவு பணத்துக்கு நீ என்ன பண்ணுவ, இதெல்லாம் இப்பொழுது தேவை இல்லை என்று சொல்கிறார். ஆனால் கதிர், பணத்தைப் பற்றி நீ யோசிக்க வேண்டாம், நான் ஏற்பாடு செய்து விட்டேன் தற்போது இருபதாயிரம் ரூபாய் கட்டினால் போதும்.

மீதமுள்ள பணத்தை நான் கொடுத்து விடுவேன், நீ எதுவும் சொல்லாமல் படிக்கிற வேலையை பார்த்து போலீசாக வரவேண்டும் என்று கரராக சொல்லிவிடுகிறார். அந்த சமயத்தில் பாண்டியன், கதிருக்கு போன் பண்ணி கடைக்கு வர சொல்கிறார். அப்பொழுது செந்தில் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த கஷ்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான்.

கூடிய சீக்கிரத்தில் எனக்கு அரசாங்க வேலை கிடைத்துவிடும், பிறகு மாசமான கையில் சம்பளம் வந்துவிடும் என்று கடையில் இருக்கும் தாத்தாவிடம் சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கே வந்த கதிர், அப்பா போன் பண்ணி வர சொன்னார் என்று சொன்னதும் பாண்டியனும் கடைக்குள் நுழைந்து விடுகிறார். பிறகு பாண்டியன், வழக்கம் போல் என்னவென்று சொல்லாமல் கதிரை திட்ட ஆரம்பித்து விடுகிறார்.

கதிர் இப்பொழுது எதற்கு என்னை திட்டுகிறீர்கள் என்று கேட்ட பொழுது ராஜியை கஷ்டப்படுத்தும் விதமாக நீ ஏதாவது கொடுமைப்படுத்துகிறாயா?? ஒழுங்கா உன்னை நம்பி வாழ வந்த பெண்ணை சந்தோஷமாக வச்சுக்க பாரு. எந்த நேரத்திலும் வீட்டில் உள்ள பெண்கள் கண் கலங்கி நிற்க கூடாது என்று அட்வைஸ் பண்ணுகிறார். அப்பொழுது கதிருக்கு எதுவுமே புரியவில்லை, என்னவென்று கேட்ட பொழுது ராஜி அப்பா என்னிடம் வந்து பேசினார்.

ராஜி என்னமோ நம்ம வீட்டில் கஷ்டப்படுவது போலயும், நீ கொடுமைப்படுத்துவது போலையும் அவர் என்னிடம் பேசிவிட்டு போகிறார். அதனால் ஒழுங்கு மரியாதையாக சந்தோசமாக ராஜியை பார்த்துக் கொள் என்று சொல்லிவிடுகிறார். கதிர் எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு போய் ராஜியை தனியாக கூப்பிட்டு உங்க அப்பா எதற்கு என்னுடைய அப்பாவை பார்த்து இப்படி சொல்ல வேண்டும்.

என்ன பிரச்சனை என்று கேட்ட பொழுது ராஜி, அரசி அங்கே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று குமாரை பார்த்து பேசினேன். ஆனால் குமார் நான் சொல்வதை கண்டு கொள்ளவில்லை, அதனால் என்னுடைய அப்பாவிடம் இந்த மாதிரி ஒரு சின்ன கட்டுக்கதை கட்டி விட்டேன். அதனால் நிச்சயம் இனி ராஜிக்கு அங்கே எந்தவித கஷ்டமும் வராது, எப்படி என்னுடைய சாமர்த்தியம் என்று ராஜி கதிரிடம் கேட்கிறார்.

கதிர் நீ என்னமோ அரசி சந்தோசத்துக்காக தான் பண்ணினாய், ஆனால் கடைசியில் என்னுடைய அப்பாவிடம் நான் வில்லனாக நிற்கும்படி நீ ஆக்கிவிட்டாய் என்று சொல்கிறார். அடுத்ததாக மீனா, செந்தில் 10 லட்ச ரூபாயை வேலைக்காக அப்பாவிடம் கொடுத்ததால் பாண்டியனுக்கு தெரிந்தால் பிரச்சினையாகும் என்பதற்காக மீனா லோனுக்கு அப்ளை பண்ணி இருக்கிறார்.

இதனை அடுத்து அரசிக்கு முதலில் பார்த்த சதீஷ் குடும்பத்தில் இருப்பவர்கள் பாண்டியன் வீட்டிற்கு வந்து கல்யாணத்துக்கு செலவு பண்ண 10 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று டிமாண்ட் பண்ணி விட்டார்கள். இதனால் பாண்டியன், செந்தில் இடம் கொடுத்து பேங்கில் வைக்க சொன்ன பத்து லட்ச ரூபாய் பணத்தை எடுத்துட்டு வரச் சொல்கிறார். இதனால் செந்தில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் கதிரிடம் எல்லாம் உண்மையும் சொல்கிறார்.

கதிர் எதுனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார், பிறகு வீட்டிற்கு வந்ததும் பாண்டியன் பணத்தை எங்கே என்று கேட்கிறார், செந்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் பொழுது கதிர் காப்பாற்றுவதற்கு தயாராகி விட்டார். ஆனால் மீனா சரியான நேரத்தில் உள்ளே புகுந்து லோனுக்கு அப்ளை பண்ணி இருந்த பத்து லட்ச ரூபாய் எடுத்துட்டு வந்து செந்தில் கொடுத்ததாக சொல்லி பாண்டியனிடம் பணத்தை கொடுத்து செந்திலை காப்பாற்றி விடுகிறார்.