Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்தில் பணம் விஷயத்தில் பாண்டியனிடம் அவமானப்படக்கூடாது என்ற நினைப்பில் செந்திலை காப்பாற்றும் விதமாக மீனா பணத்தை ஏற்பாடு பண்ணி பாண்டியனிடம் கொடுத்து செந்திலை காப்பாற்றி விடுகிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத செந்தில், மீனா செஞ்ச உதவிக்கு மீனாவிடம் பேச வேண்டும் என்று கடைக்குப் போனதும் செந்தில், மீனாவுக்கு போன் பண்ணுகிறார்.
ஆனால் மீனா போனை கோமதி எடுத்து என்னவென்று கேட்கும் பொழுது மீனாவிடம் தான் பேசணும் என்று சொல்கிறார். உடனே கோமதி, கல்யாணமான பிறகு அம்மா எல்லாம் சும்மா என்று ஆகிவிட்டது. பொண்டாட்டியிடம் சொல்லக்கூடிய விஷயத்தை அம்மாவிடம் மறைக்கணும் என்று நினைக்கிறீர்கள் என சும்மா புலம்ப ஆரம்பித்து விட்டார். உடனே செந்தில், மீனாவிடம் ஐ லவ் யூ என்று சொல்ல வேண்டும். அவள் வந்ததும் நீயே சொல்லிவிடு என்று கோமதியிடம் சொல்லி போனை வைத்து விடுகிறார்.
இதைக் கேட்டதும் அதிர்ச்சியான கோமதி எதுவும் பேசாமல் மீனாவிடம் உளறி விட்டு போய்விடுகிறார். பிறகு வீட்டிற்கு வந்த செந்தில், மீனாவிடம் தவறுக்கு மன்னிப்பு கேட்டு மீனாவிடம் சமரசம் ஆகி விடுகிறார். அடுத்ததாக பாண்டியன், சும்மா இருந்த கதிரை வம்புக்கு இழுக்கும் விதமாக நாலு பாடத்தில் தோல்வியடைந்து விட்டாய். இனி அடுத்து என்ன பண்ணுவதாக முடிவெடுத்திருக்கிறாய் என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு கதிர் என்னுடைய விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு பாண்டியன், வாடகை வண்டியை ஓட்டி சம்பளத்தை வாங்குவதற்கு பதிலாக நம்முடைய கடைக்கு வந்து வேலை பாரு. அதில் வாங்கும் சம்பளத்தை விட 100 ரூபாய் அதிகமாக உனக்குத் தருகிறேன். நீ சந்தோஷமாக நிம்மதியாகவும் இருக்கலாம் என்று சொல்கிறார்.
உடனே செந்திலை பாண்டியன் உதாரணமாக சொல்கிறார். அப்பொழுது கதிர், செந்தில் அண்ணன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருப்பதாக உங்களிடம் சொன்னாங்களா என்று கேட்கிறார். அப்பொழுது பாண்டியன், செந்திலிடம் வாய் திறந்து பதில் சொல்லு என சொல்கிறார். ஆனால் செந்தில் எதுவும் சொல்லாமல் விட்டதால் பாண்டியன் எல்லாத்தையும் திட்டி விட்டு போய் விடுகிறார்.
ஆனால் அரசி கல்யாணத்துக்கு பிறகு கதை எதுவும் சுவாரசியமாக இல்லாமல் இருக்கிறது. முக்கியமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எதிர்பார்த்த கதை ட்ராக் மாறி வேறு எங்கேயோ போகிற மாதிரி இருக்கிறது. தங்கமயில் சரவணன் கதை அப்படியே நின்று விட்டது, ராஜி கதிர் கதையும் காட்டப்படவில்லை. ஏதோ கதை இல்லாமல் சுற்றி வருவது போல் இருக்கிறது. அதிலும் அரசி குமரவேலு கல்யாணம் மர்மம் அப்படியே அடங்கி போய்விட்டது.