வீரா சீரியலில் மாறனுக்கு உதவி பண்ணிய ராமச்சந்திரன்.. சந்தோசத்தில் வள்ளி

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், மாறன் வீரா பேச்சை கேட்டு தனியாக வந்தாலும் முன்னேறி காட்ட வேண்டும் என்று ராமச்சந்திரன் ஆசைப்பட்டார். அதனால் கையேந்தி பவன் ஹோட்டல் ஆரம்பித்த மாறனுக்கு பிரச்சனை ஏற்பட்ட பொழுது ராமச்சந்திரன் துணி பிசினஸ் ஆரம்பிப்பதற்கு ஐடியா கொடுத்தார்.

அதன்படி வீரா உதவி செய்து மாறன் சைக்கிள் மூலம் துணி வியாபாரம் செய்து வந்தார். இருந்தாலும் மாறன் இப்படியே இருந்து விடக்கூடாது என்பதற்காக ராமச்சந்திரன், தெரிஞ்சவரிடம் ஒரு கடை விலைக்கு கொடுக்கப் போகிறீர்கள் என்பதை கேள்விப்பட்டேன்.

அதை என்னுடைய பையன் மாறனுக்கு கொடுத்தால் நிச்சயம் அவன் முன்னேறி விடுவான் என்று சொன்னார். உடனே அந்த நபரும் மாறனை சந்தித்து கடை விலைக்கு போவதை சொன்னார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட வீரா, ஆட்டோ ரேஸில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்று பணத்தை மாறன் பிசினஸ் பண்ணுவதற்கு கொடுத்தார்.

அதன்படி ராமச்சந்திரன் ஆசைப்பட்ட மாதிரி மாறனும் துணி பிசினஸை ஒரு கடையின் மூலம் ஆரம்பித்து விட்டார். அந்த கடைக்கு வரும் ராமச்சந்திரன், வீரா மற்றும் மாறனை வாழ்த்தி சந்தோஷப்பட்டு கொண்டார். இதனைப் பார்த்த வள்ளியும், அண்ணன் மனசு மாறிவிட்டது என்று சந்தோஷத்தில் இருக்கிறார்.

இப்படி எல்லோரும் சந்தோஷமாக இருக்கும் இந்த தருணத்தில் விஜி மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு தயாராகி விட்டார். இதில் முதல் பலியாடாக சிக்கப்போவது வள்ளி தான். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட கண்மணி, வள்ளிக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை மாறன் மற்றும் வீராவிடம் சொல்லப் போகிறார்.

அந்த வகையில் வள்ளிக்கு வரும் பிரச்சனையை தடுக்கும் விதமாக மாறன் மற்றும் வீரா, விஜியிடம் இருந்து காப்பாற்றி விடுவார்கள். ஆனால் இதோடு நிறுத்தாமல் விஜி எதற்காக ராமச்சந்திரன் குடும்பத்திற்கு பழிவாங்க வந்திருக்கிறார், கார்த்திக் மீது எந்த தவறும் இல்லை என்ற விஷயத்தையும் கண்டுபிடித்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.