Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவிற்கு பிறந்தநாள் என்பதால் பாக்கியா கோபி மற்றும் ஈஸ்வரி என அனைவரும் இனியாவிற்கு சர்ப்ரைஸ் ஆக கிப்ட்களை கொடுத்து விட்டார்கள். பிறகு வீட்டிற்கு நேரமாகிவிட்டதால் கோபி, இனியாவை சுதாகர் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். அப்படி விட வரும் பொழுது நித்தீஷ் அங்கே இருந்ததால் கோபி பேசுகிறார்.
ஆனால் கோபி பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமல் நித்தீஷ் மாடிக்கு போய் விடுகிறார். இதனால் சுதாகர், கோபியை சமாதானப்படுத்துவதற்காக பேச்சு கொடுக்கிறார். அப்பொழுது கோபி இனியாவிற்கு நாளை பிறந்தநாள் என்பதால் பாக்கியா இனியாவை கூப்பிட்டு ஷாப்பிங் போயிருந்தார் என சொல்கிறார். உடனே சுதாகர், ஆமாம் நாங்களும் எங்களுடைய மருமகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நாளை ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறோம்.
அந்தப் பார்ட்டில் நீங்கள் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும், நானும் நண்பர்கள் மற்றும் உறவினர்களை கூப்பிட்டு பெருசாக நடத்தப் போகிறேன் என்று சொல்லி விடுகிறார். ஆனால் இதை எல்லாம் கேட்ட சந்திரிகா, சுதாகரிடம் சண்டை போடுகிறார். அதற்கு சுதாகர், கோபி வந்து பேசும்பொழுது உன்னுடைய பையன் ஒழுங்காக பேசியிருந்தால் நானும் கோபியை ஏமாற்றுவதற்கு இந்த மாதிரி டிராமா பண்ணி இருக்க தேவையில்லை.
தொடர்ந்து உன்னுடைய பையன் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறான். அதை நான் சமாளிக்கும் விதமாக ஏதாவது பண்ண வேண்டியதாக இருக்கிறது. வேற வழியில்லை நாளைக்கு இனியாவின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். பிறகு மறுநாள் இனியா ஆபீஸ்க்கு கிளம்பும்போது நித்தேஷ் மற்றும் சந்திரிகாவை கூப்பிட்டு இனியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்ல சொல்கிறார்.
அத்துடன் சுதாகர், ஈஸ்வரிக்கு போன் பண்ணி சாயங்காலம் இனியாவின் பிறந்தநாள் பார்ட்டி இருக்கிறது. நீங்கள் அனைவரும் குடும்பத்துடன் வரவேண்டும் என்று சொல்கிறார். இதைக் கேட்டதும் ஈஸ்வரி சந்தோஷப்பட்டு பாக்யாவிடம் இனியாவிற்கு நல்ல புகுந்த வீடு கிடைத்திருக்கிறது. அருமையான மாமனார் பாசமான மாமியார், இனியாவை நல்லா பார்த்துக் கொள்ளும் மாப்பிள்ளை. இனியா ரொம்ப கொடுத்து வைத்தவள் என்று பாக்கியாவிடம் பெருமையாக ஈஸ்வரி சொல்கிறார்.
அப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாக்யாவின் தோழி ஒருத்தி பாக்கியாவிடம் பேசிட்டு போனதை நினைத்து ஈஸ்வரி அந்த தோழியை பற்றி கேட்கிறார். உடனே பாக்யா, ரொம்ப நல்ல பொண்ணு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இப்பொழுதுதான் கல்யாணத்திற்கு சம்மதம் கொடுத்திருக்கிறாள், நீங்க வேண்டுமென்றால் உங்க பையன் கோபிக்கு அந்த பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க.
நான் அந்த பெண்ணுடைய அட்ரஸ் தருகிறேன் குடும்பத்தில் போய் பேசிப் பாருங்க என்று கோபிக்கு பொண்ணு பார்க்கும் விதமாக ஈஸ்வரிடம் பாக்யா சொல்கிறார். ஈஸ்வரி நீ என்னை கிண்டல் பண்ணுகிறாயா?? யாரோ ஒருத்தி என் பையனை கல்யாணம் பண்றதுக்கு நீயே கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா, என்ன ஆள விடுங்க என்று கையெடுத்து கும்பிட்டு போய்விடுகிறார்.