இனியாவை சித்திரவதை செய்யும் சுதாகர் குடும்பம்.. பாக்யா போல் விவாகரத்துக்கு தயாராகும் மகள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவின் ஹோட்டலில் இனியா ஆகாசுடன் பேசியதை பார்த்த நித்தேஷ் வீட்டிற்கு போய் இனியாவிடம் அந்த ஆகாஷை பார்ப்பதற்காக தான் நீ உங்க அம்மாவின் ஹோட்டலுக்கு போயிட்டு வருகிறாயா. உனக்கு ஆகாசுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு எல்லாமே தெரியும். அவனைப் பார்ப்பதற்காக தான் இவ்வளவு மேக்கப் போட்டு இருக்கியா என்று சைக்கோ மாதிரி கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.

இதற்கு இனியா சொன்னது நான் சும்மா ஆகாஷை பார்த்து எப்படி இருக்கிறாய் என்றுதான் கேட்டேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இனி அதையும் நான் கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு தூங்கி விடுகிறார். ஆனாலும் நித்தேஷ் இரவு முழுவதும் தூங்காமல் சைக்கோ மாதிரி நடந்து கொண்டார். பிறகு இந்த விஷயத்தை காலையில் அம்மா அப்பாவிடமும் சொல்லிவிட்டார்.

உடனே சுதாகர் இது தான் சான்ஸ் என்று இந்த விஷயத்தை வைத்து இப்பொழுது எதுவும் பேச வேண்டாம். நேரம் கிடைக்கும் பொழுது நான் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என்று மனைவியை கண்ட்ரோல் பண்ணுகிறார். இது எதுவும் தெரியாமல் சகஜமாக வந்த இனியாவிடம் யாரும் முகம் கொடுத்து கூட பேசவில்லை. சாப்பிட போன இடத்திலும் மாமியார் கொஞ்சம் கூட பேசாமல் இருக்கிறார் என்று சந்தேகப்பட்ட இனியா ஏன் என்னாச்சு என்று கேட்கிறார்.

அதற்கு மாமியார், ஆகாசுடன் இனியவை சேர்த்து வைத்து தவறாக பேசுகிறார். இதனால் இனியா மனவருத்ததில் பாக்கியாவை சந்தித்து பேசுவதற்காக ஹோட்டலுக்கு போகிறார். அங்கே போனதும் அம்மாவிடம் நடந்ததை சொல்ல முடியாமல் அழுகிறார். உடனே பாக்கியா என்னாச்சு ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். அப்பொழுது கூட இனியா, பாக்கியாவிடம் உண்மை சொல்லாமல் மறைக்கப் போகிறார்.

ஆனால் கோபியிடம், சுதாகர் வீட்டில் நிம்மதி இல்லாமல் தவிக்கும் இனியா நடந்ததை சொல்லப் போகிறார். பொறுமையாக இருக்கும் இனிய கடைசியில் இந்த குடும்பமே வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு பாக்யா வீட்டிற்கு வரப் போகிறார்.