Serial: டிஆர்பி ரேட்டிங்கில் அதிகமான புள்ளிகளை பெற்று முதல் ஐந்து இடத்தில் இருக்கும் சீரியல் சன் டிவியில் தான். ஆனாலும் சில சீரியல்கள் கதையே இல்லாமல் ஓட்டிக்கொண்டு வருவதால் மக்களிடம் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக அரைத்த மாவை அரைத்துக் கொண்டு வருகிறார்கள்.
ஆனாலும் சேனலை பொருத்தவரை டிஆர்பி ரேட்டிங்கில் இடம்பெறுவதால் சீரியலை முடிக்காமல் தொடர்ந்து கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட இந்த சீரியலை பலமுறை நெட்டிசன்கள் கலாய்த்து இருக்கிறார்கள். அதாவது ஒரு காலத்தில் பேவரைட் சீரியலாக இருந்த கயல் சீரியல் தற்போது இழுப்பறையாக இருக்கிறது.
ஆரம்பத்தில் தேவி கர்ப்பமாக இருந்த பொழுது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காமல் கதையை ஓட்டி வந்ததால் இந்த விஷயம் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது.
அதன் பின் கயல் எழில் திருமணம் கிட்டதட்ட ஒரு வருடமாக இழுத்து அடித்து வந்ததால் இந்த விஷயமும் கலாய்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சினையை கொண்டு வந்து சிங்க பெண்ணாக காட்டும் விதமாக கயல் ஓவர் டிராமா பண்ணுவது பார்ப்பவர்களை எரிச்சல் படுத்தும் விதமாக அமைந்தது.
அதோடு சமீபத்தில் ஆனந்தம் படத்தைப் போல மூர்த்தியின் மகளுக்கு ஆபரேஷன் பண்ண வேண்டும் என்பதற்காக பல பிரச்சனை குடும்பத்தில் வந்தது. இதை பார்க்கும் பொழுது ஆனந்தம் படத்தை அப்படியே காப்பி அடித்திருக்கிறார்கள் என்று ட்ரோல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து இரண்டு நாட்களுக்கு முன் எழில் மற்றும் கயல் இரு சக்கர வாகனத்தில் போட்டியில் கலந்து கொள்ள போகும் பொழுது ஒரு காரில் மோதினார்கள்.
பிறகு அந்த கார் ஓனர், கயலிடம் பிரச்சினை பண்ணும் பொழுது எழில் கார் பற்றி விஷயங்களை புட்டு புட்டு வைத்தார். இந்த சம்பவத்தை பார்க்கும் பொழுது பிச்சைக்காரன் படத்தில் ஹீரோயின் பைக், காரில் மோதப்பட்ட பொழுது கார் ஓனர் ஓவராக பேசினார். அப்பொழுது விஜய் ஆண்டனி, கார் பற்றிய விஷயங்களை சொல்லி அவருடைய மூக்கை உடைத்தார்.
அதே காட்சிகள் தான் தற்போது கயல் சீரியலிலும் வைக்கப்பட்டதால் கேலிக்கும் கிண்டலுக்கும் கயல் சீரியல் ஆளாகிவிட்டது. என்னதான் இந்த சீரியலை கலாய்த்தலும் அதைப் பற்றி பெரிசாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஒட்டிக்கொண்டு தான் வருகிறார்கள்.