மகாநதி சீரியலில் பசுபதிக்கு வேட்டு வைக்கப் போகும் 3 சகலைகள்.. காவேரி விஜய்க்கு சொன்ன விஷயம்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலாவின் தற்கொலைக்கு விஜய் தான் காரணம் என்று அனைவரும் நினைத்த நிலையில் வெண்ணிலாவை மொட்ட மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டது பசுபதி தான் என்று குமரனுக்கு தெரிந்து விட்டது. குமரன் கையில் ஆதாரம் இருக்கிறது என்று பசுபதிக்கு தெரிந்த நிலையில் ஒரு சின்ன விபத்து பண்ணி குமரனிடமிருந்த போனை உடைத்து ஆதாரத்தை அழித்து விடுகிறார்.

உடனே நவீன், குமரனை பார்ப்பதற்காக வருகிறார். அங்கே காவிரியும் வந்த நிலையில் பசுபதி செய்த விஷயம் நவீன் காவேரிக்கு தெரிந்து விட்டது. அத்துடன் காவிரி மூலமும் வெண்ணிலா தற்போது உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதற்கு காரணம் பசுபதி தான் என்று விஜய்க்கும் தெரிந்து விட்டது. இதனால் கோபமான பசுபதி, குமரன் கடையை அடித்து உடைத்து சின்னா பின்னமாக ஆக்கி விடுகிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட குமரன் கடைக்கு வந்து பார்த்து ரொம்பவே ஃபீல் பண்ணுகிறார். அப்பொழுது நவீன் வந்து ஆறுதல் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் ஏதோ ஒரு பிரச்சனை என்று கங்கா சந்தேகப்பட்டு குமரன் இடம் கேட்கிறார். ஆனால் குமரன், கங்காவுக்கு எதுவும் அதிர்ச்சியான விஷயத்தை சொல்ல கூடாது என்பதால் மறைத்து விடுகிறார்.

இருந்தாலும் காவேரி, யாருக்கும் தெரியாமல் நவீனுக்கு போன் பண்ணி குமரன் மாமாவுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு தெரிந்து கொள்கிறார். அப்பொழுது நவீன், காவிரியிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து யமுனாவும் சந்தேகப்பட்டு திட்டுகிறார். இதனை அடுத்து மறுநாள் குமரன் கடைக்கு போன நிலையை நவீனம் போயி கடையை சரி பண்ணி விடலாம், ரொம்ப பீல் பண்ணாதீங்க என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார்.

அப்பொழுது இரண்டு பேரும் கடையை சரி செய்து கொண்டிருக்கும் போது அங்கே விஜயும் வந்து கடை உடைந்து போய் இருப்பதை பார்க்கிறார். விஜய்க்கு இந்த தகவலை சொன்னது காவேரி தான். இதனை அடுத்து ஓவராக போய்க் கொண்டிருக்கும் பசுபதிக்கு மூன்று சகலைகளையும் சேர்ந்து ஆப்பு வைக்கும் விதமாக தரமான சம்பவத்தை செய்யப் போகிறார்கள்.

அதாவது வெண்ணிலா மற்றும் பசுபதிக்கு பிரச்சினை நடந்தது மொட்டை மாடியில் வைத்து தான். அதனால் பக்கத்து வீட்டு சிசிடிவி கேமராவை பார்த்தால் வெண்ணிலாவுக்கு என்ன ஆனது என்று தெரிந்துவிடும். அதனால் அதன் மூலம் பசுபதி கூடிய சீக்கிரத்தில் மாட்டிக் கொள்ளப் போகிறார்.