Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழன் நிலா மனதில் இடம் பிடிக்க வேண்டும். அதற்கு ஏற்ற ஒரு சந்தர்ப்பம் அமைய வேண்டும் என்று யோசித்தார். ஆனால் தன்னுடன் நிலா தனியாக வரமாட்டார் என்று முடிவு பண்ணிய சோழன் பிக்னிக் ஒன்றை ஏற்பாடு பண்ணினார். அந்த வகையில் மற்றவர்களிடம் பல்லவனின் மனசு மாற வேண்டும் என்றால் எல்லோரும் சேர்ந்து வெளியே போயிட்டு வரலாம் என சொன்னார்.
உடனே அதுவும் சரியான முடிவு என்று சோழன் பாண்டியன் பிக்னிக் போவதற்கு சம்மதம் கொடுத்து விட்டார். ஆனால் நிலா, நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க நான் வரவில்லை என்று சொன்னார். அதுவும் சோழன் கூப்பிட்டதும் வர மறுத்துவிட்டார். உடனே சோழன் மற்றவர்கள் மூலம் நிலாவிடம் பேசி கூட்டிட்டு வருவதற்கு காய் நகர்த்தி விட்டார்.
அந்த வகையில் ஒட்டுமொத்த குடும்பமும் பிக்னிக் போய்விட்டார்கள். அதே நேரத்தில் நிலாவின் குடும்பமும் அங்கே போயிருக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் எல்லோரும் சந்தித்த நிலையில் சோழனை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நிலாவின் அண்ணன் சில திருட்டு வேலைகளை பார்த்தார். இதை கண்டுபிடித்த பாண்டியன் நிலவின் அண்ணன் சட்டையை பிடித்து நியாயம் கேட்கிறார்.
உடனே நிலாவின் அம்மா, நிலாவை காயப்படுத்தும் விதமாக இவர்களுடன் தனியாக நீ வந்து சுற்றிக் கொண்டிருக்கிறாய். உனக்கு வெட்கமா இல்லையா என்று அனைவரது முன்னாடியும் அவமானப்படுத்தும் விதமாக கேள்வி கேட்டு விட்டார். இதனால் பதில் சொல்ல முடியாத நிலா அமைதியாக இருந்த நிலையில் நிலாவின் குடும்பம் என்பதால் மற்றவர்களும் எதுவும் பேச முடியாமல் போய்விடுகிறார்கள்.
அதன் பிறகு ஊருக்கு திரும்பிய நிலையில் கார்த்திகாவுக்கு ஏற்பாடு பண்ண மாப்பிள்ளையுடன் கல்யாணம் நடக்கப் போகிறது. இதை தடுக்க முடியாமல் சேரன் குடும்பத்தில் இருப்பவர்களும் அமைதியாகி விடுகிறார்கள். அந்த வகையில் சேரனுக்கு கார்த்திகா இல்லை என்று முடிவாகிவிட்டது. அதற்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகி என்டரி கொடுப்பார்.