பாக்கியலெட்சுமி சீரியல் இல் இனியாவிடம் கோபி உனக்கு அங்க இருக்க பிடிக்கலைன்னா நம்ம வீட்டுக்கு வந்துருனு கூப்பிடுறான். இல்லை அப்பா நீங்க வந்துட்டு போனபிறகு அங்கிள் என்கிட்டே பாசமா நடந்துகிறார். எல்லா பிரச்னையும் சரி பண்ணிடலாம் கவலைப்படாதேனு சொல்லிட்டாரு நீங்களும் கவலைப்படாதீங்க அப்பா என்று இனியா சொல்கிறாள்.
அது எப்படி உன்னை பத்தி யோசிக்காம இருக்க முடியும் இவ்வளவு ஈசியா நீ சொல்லிட்டனு கோபி இனியாவாடம் கேட்கிறான். நிதீஷ் உன்கிட்ட நல்லபடியா பேசுறானான என கோபி கேட்க இல்ல டாடி அவரு என்கிட்ட பேசலனு இனியா சொல்கிறாள்.
கோபி ஏம்மா இனியா நியாயமா பார்த்தால் நான் தானே கோபமா இருக்கனும் ஆனால் நிதீஷ் ஏன் யாரிடமும் ஒழுங்கா பேசமாட்டேங்கிறானு கேட்கிறான். மாமனாருனு ஒரு மரியாதை கூட இல்லைனு வருத்தபடுகிறான் கோபி.
அதற்கு இனியா அம்மா வீட்டிலருந்து அத்தை, பாட்டி வரும் போது நீங்க மரியாதை கொடுத்து பேசுனது இல்லை அதுதான் உங்களுக்கு திரும்ப வருது அதுக்காக நான் நிதீஷ் க்கு சப்போர்ட பண்றேன் நினைக்காதீங்க டாடினு சொல்கிறாள்.
பாட்டி இப்போ எங்க இருக்காங்கனு உங்களுக்கு தெரியுமா, இல்லை அம்மா பாட்டிகிட்ட பேசுறாங்கன்னு உங்களுக்கு தெரியுமா நாம் எதை பத்தியும் கவலைபடுறது இல்லைனு கோபியை இனியா குத்தி பேசுகிறாள்.
பாக்கியாவை பார்க்க இனியா ஹோட்டலுக்கு செல்கிறாள். என்ன இனியா உனக்கு ஆபிஸ் இல்லையா என பாக்கியா கேட்க ஆபீஸ் போய்ட்டு உன்னை பார்க்க வந்தேன் என்று சொல்கிறாள். இனியா உனக்கு எதாவது பிரச்சனையா அப்பா காலைல உன்னை நினைத்து கவலைபட்டு பேசுனாருனு பாக்கியா சொல்கிறாள்.
அம்மா உன்னுடைய Resume லாம் எடுத்துட்டு நாம ஒரு Competition கலந்துக்க போறோம் வாமான்னு பாக்கியாவை இனியா அழைத்து செல்கிறாள். அங்கு பாக்கியா மேனேஜரிடம் Resume கொடுக்கிறாள். மேனேஜரோ பாக்கியாவை பார்த்து இது ஒன்னும் வீட்ல youtube பார்த்து சமைக்கிறது இல்லை இது International food ரெடி பண்ற பெரிய Restaurant என்று அவமானப்படுகிறார்.
உடனே பாக்கியா கவலைப்பட இனியா பாக்கியாவிடம் அம்மா தைரியத்தை இழக்காதே நமக்கு இந்த காண்ட்ராக்ட் கண்டிப்பா கிடைச்சிரும்னு ஆறுதல் கூறுகிறாள். பாக்கியாவிற்கு ஹோட்டல் காண்ட்ராக்ட் கிடைக்குமா கிடைக்காதா என பின்வரும் எபிசோட் இல் பார்க்கலாம்.