Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், கவிதாவிற்கு சேரனை கல்யாணம் பண்ணுவது இஷ்டம் தான். ஆனால் போட்ட கண்டிஷன் கல்யாணத்துக்கு பிறகு தனியாக வர வேண்டும் என்றுதான். ஆனால் இதற்கு விருப்பமில்லாமல் சேரன் அப்பொழுது நோ என்று சொல்லிவிட்டார். இது தெரியாத தம்பிகள் கவிதா குடும்பத்தில் இருப்பவர்களிடம் பேசிப் பார்க்கலாம் என்று போனார்கள்.
போன பொழுது தான் கவிதா போட்ட கண்டிஷன் என்னவென்று தெரிந்தது. உடனே நம்மளால் அண்ணனுக்கு நல்லது நடக்காமல் போய் விடக்கூடாது. அதனால் அண்ணன் தனியாக போயி சந்தோசமாக வாழட்டும் என்று கல்யாணத்திற்கு சம்பந்தத்தை தெரிவித்து விட்டார்கள். இப்படி அந்த பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்திருக்கும் என்ற குழப்பத்தில் சேரன், கவிதாவை சந்தித்து பேசினார்.
அப்படி பேசிய பொழுது தனிக்குடித்தனத்தை பற்றி சொல்லி உங்களுக்கும் சம்மதம் என்று உங்கள் தம்பிகள் சொன்னதால் கல்யாணத்திற்கு நான் ஓகே சொல்லி விட்டதாக சொல்கிறார். இதனால் அதிர்ச்சியான சேரன் வீட்டிற்கு வந்து எனக்கு தனியாக போவதில் இஷ்டமில்லை. உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டு தனியாக போய் சந்தோசமாக வாழ வேண்டும் என்றால் அதில் எனக்கு எந்தவித மறுப்பும் இல்லை.
ஆனால் அதே நேரத்தில் என்னை இந்த வீட்டை விட்டு போக சொல்ல யாருக்கும் உரிமையும் இல்லை என்று சொல்லி செண்டிமெண்டாக பேச ஆரம்பித்து விட்டார். உடனே தம்பிகளும் அண்ணனின் பாசத்திற்கு உருகிப் போய் விட்டார்கள். அடுத்ததாக பாண்டியன் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது பாண்டியனை காதலிக்கும் காதலி வருகிறார்.
அப்பொழுது பாண்டியன் எங்க வீட்டில் வந்து நீ வாழ்வதற்கு தயார என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பெண்ணும் நீ இப்பொழுதே கூட்டிட்டு போனால் நான் உங்க வீட்டில் வாழ்வதற்கு ஓகே தான் என்று சொல்கிறார். இதை கேட்டதும் பாண்டியன் அப்படி என்றால் எங்க அண்ணன் சேரனை நீ கல்யாணம் பண்ணிக்கோ என்று தன்னுடைய காதலியே அண்ணனுக்கு தாரவாத்துக் கொடுப்பதற்கு பேசி விட்டார்.
இதனை எதிர்பார்க்காத பாண்டியனின் காதலி அதிர்ச்சியாகி விட்டார். எப்பொழுது நிலா வந்து சேரனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தாரோ அப்பொழுதே பிரச்சினைதான் உருவாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப நிலா, சேரன் கல்யாணத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் கடைசியில் சேரனுக்கு நல்லபடியாக கல்யாணம் நடந்துவிடும்.