Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி குமரவேலு கல்யாணத்தை சந்தேகப்பட்ட மீனா, பழனிவேல் மூலம் அரசியை கோயிலுக்கு கூட்டிட்டு வர சொன்னார். அதன்படி கோவிலுக்கு வந்த அரசி, மீனா மற்றும் ராஜிடம் குமரவேலு மற்றும் சுகன்யா செய்த தில்லாலங்கடி வேலைகளை பற்றி சொல்லி குமரவேலு எனக்கு தாலி கட்டவில்லை.
குமரவேலு நம்ம குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று என்னை பகடைக்காயாக யூஸ் பண்ண நினைத்தார். ஆனால் நான் அவனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு அவன் வீட்டிற்கு போய் இருக்கிறேன். மத்தபடி நான் குமரவேலுவின் மனைவியும் கிடையாது, என்னுடைய கணவரும் அவர் இல்லை என்று எல்லா உண்மையையும் மீனா மற்றும் ராஜியிடம் சொல்லிவிட்டார்.
இதனால் மீனா, நடந்தது நடந்துட்டு போகட்டும். நீ இனி அவன் வீட்டில் இருக்க வேண்டாம். என்னுடன் வீட்டிற்கு வந்துவிடு மாமாவிடம் நாங்கள் சொல்லி சமாளித்துக் கொள்கிறோம் என்று அரசியை கூப்பிடுகிறார். ஆனால் அரசி பிடிவாதமாக வரமாட்டேன் என்று சொல்லி குமரவேலுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அதற்கு நான் அவனுடைய வீட்டில் இருந்தால் தான் சரியாக இருக்கும்.
நான் உங்களிடம் சொன்ன எந்த உண்மையையும் யாருக்கும் தெரியக்கூடாது. அதனால் எனக்கு சத்தியம் பண்ணுங்க என்று அரசி கேட்கிறார். உடனே மீனா மற்றும் ராஜி, முட்டாள்தனமாக அரசி கேட்ட சத்தியத்தை கொடுத்து விடுகிறார். அடுத்ததாக குடும்பத்தில் இருப்பவர்கள் தற்போது மன வருத்தத்தில் இருக்கிறார்கள் என்று சரவணன் அரசியை நினைத்து பீல் பண்ணுகிறார்.
அந்த நேரத்தில் தங்கமயில் வந்து சரவணனுக்கு ஆறுதல் சொல்கிறார். ஆனால் தங்கமயில் பேச்சை கேட்க முடியாத சரவணன், தங்கமயில் டிரஸ்ஸை எடுத்துக்கொண்டு தங்கமயில் கூட்டிட்டு அம்மா வீட்டிற்கு கிளம்பி விட்டார். கோமதியிடம் தங்கமயில் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் கொஞ்ச நாள் தங்கமயில் அங்கே இருந்து அவங்க அம்மாவை பார்த்துக் கொள்ளட்டும் என்று சொல்லி தங்கமயிலை கூட்டிட்டு போய்விடுகிறார்.
தங்கமயில் எங்கே போகிறோம் என்று தெரியாமல் சரவணன் உடன் போன நிலையில் வீட்டு வாசலுக்கு வந்த பிறகுதான் சரவணன் கோபப்பட்டு தன்னை இங்கே விடப் போகிறார் என்று தெரிகிறது. உடனே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி சரவணன் காலில் விழுந்து கெஞ்சுகிறார். வெளியே வந்த தங்கமயில் அம்மா, அப்பா சரவணனை உள்ளே கூப்பிட்டு கெஞ்சுகிறார்கள்.
ஆனால் சரவணன் ஒட்டுமொத்த குடும்பமும் செய்த துரோகத்தை மறக்க முடியாமல் கோபமாக பேசிவிட்டு தங்கமயிலுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அம்மா வீட்டிலே விட்டுட்டு போய் விடுகிறார். என்னதான் சரவணன் செய்தது கஷ்டமாக இருந்தாலும் ஏமாற்றியதை தாங்க முடியாமல் சரவணன் எடுத்த முடிவு சரியானதுதான். இதனை அடுத்து அரசி வாழ்க்கை சரி செய்ய முடியாதபடி குமரவேலுடன் அரசியின் தலையெழுத்து அமைந்து விட்டது.