Ethirneechal : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “எதிர்நீச்சல்” சீரியல் அடுத்தடுத்து பரபரப்பான சில திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கதிர் நந்தினியின் மகள் தாரா சடங்கு நிகழ்ச்சியில், நந்தினியின் தம்பியை வரவிடாமல் தடுப்பதற்காக கதிர் செய்த சதித்திட்டம் நந்தினியின் தம்பி மூலமாகவே நந்தினிக்கு தெரிய வந்தது.
எங்கு தேடியும் தர்ஷன் கிடைக்காததால் வீட்டிற்கு வந்த சக்தி மருமகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பார்க்கவியை தேடிக் கொண்டிருப்பதாக அறிந்து கொண்ட மருமகள்கள். சக்தியிடம் பார்க்கவி தர்ஷனின் தேர்வு முடிந்த அன்றைக்கு ஊரை விட்டு சென்று விட்டாள் என்று கூறுகின்றனர்.
மருமகள்களுக்கு எதிராக திரும்பும் சக்தி…
இதைக் கேட்டு கோபமடைந்த சக்தி அப்போ உங்களுக்கு எல்லாமும் தெரிந்து சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்று கோபாமாக பெண்களுக்கு எதிராக கேள்வி கேட்கிறான். குணசேகரன் கதிரிடம் மருமகள்கள் தான் தர்ஷனை ஒளித்துவைத்திருக்கிறார்கள் என கூறுகிறார்.
உடனே கதிர் வீட்டுக்குள்ளேதான் இருக்கிறார்கள் எப்படி முடியும் என கேட்கிறார். அதற்கு குணசேகரன் ஜீவானந்தத்தின் மூலியமாக பேசி இதை அமைதியாக செய்திருக்கலாம் எனவும் கூறுகிறார். சக்தியும் பெண்களுக்கு எதிராக திரும்பி விட்டார். இனி அண்ணன், தம்பி நான்கு பேரும் சேர்ந்து பெண்களை எதிர்த்து நிற்க போகிறார்கள். மறுபடியும் ஆண்கள் அணி, பெண்கள் அணியென போராட்டகளமாக போகிறது எதிர்நீச்சல்.
அந்த வகையில் வீட்டில் உள்ள அனைத்து நபர்களின் கோபமும் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகியோர் மீது திரும்புகிறது. மருமகள்கள் மீது குற்றத்தை சுமத்த போகிறார்கள் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இனி குணசேகரன் பெண்களை விட்டுவைக்க போறதில்லை. தர்ஷனையும் பார்கவியையும் தேடும் முயற்சி தீவிரமடைந்து வருகிறது.
தர்ஷனையும், பார்க்கவியையும் கொல்வதற்காக ஒரு கும்பல் தேடி வருகிறது. இது அனைத்திற்கும் பதில் ஜீவானந்தம் வந்தால் தான் புரியும். மருமகள்களும், அண்ணன் தம்பி நால்வரும் மற்றும் அறிவுக்கரசி ஆகியோரும் கொடைக்கானலை நோக்கி செல்ல போகிறார்கள். அங்கு தர்ஷனையும், பார்க்கவியையும் மருமகள்கள் ஜீவானந்தத்தின் உதவியோடு காப்பாற்ற போகிறார்கள். இனி வரும் கதைக்களம் இவ்வாறு தான் தொடர போகிறது.