டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.. ஆனந்தியின் கோழைத்தனம், கெத்து காட்டும் சூர்யா

Serial Trp rating List: சின்னத்திரையில் சீரியல்கள் போட்டி போட்டுக்கொண்டு பல சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் எப்பொழுதுமே முதலிடத்தில் சன் டிவி சீரியல் தான் இடம் பிடிக்கிறது. ஆனால் எதிர்பார்க்காத அளவிற்கு இந்த வாரம் மிகப்பெரிய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதைப்பற்றி தற்போது ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

சிறகடிக்கும் ஆசை: சீதாவின் காதல் முத்துவுக்கு தெரிய வந்த நிலையில் அருண் நம்மிடம் பிரச்சனை பண்ணியவன் என்பதால் சீதாவிற்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணுவதில் மும்மரமாக இருக்கிறார். ஆனால் அக்கா காதல் கை கூட வேண்டும் என்று நினைக்கும் சத்தியா, மீனா மற்றும் முத்துவை பார்த்து பேசி சீதாவின் கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணப் போகிறார். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.42 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்: போலீஸ் ஸ்டேஷனில் என்னதான் சித்திரவதை அனுபவித்தாலும் பிரபுவிடம் உண்மை சொல்லக்கூடாது என்று ஆதிரை தீர்மானமாக இருந்தார். ஆனால் பிரபுவுக்கு சந்தேகம் வந்ததால் ஆதிரை அனைத்து உண்மைகளையும் சொல்லும்படி நிலைமையாகி விட்டது. இதைத் தாண்டி ஆதிரையை எப்படி பிரபு வெளியே கூட்டிட்டு வருவார் என்பது தான் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.52 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

கயல்: கயலுக்கு வெளியில் இருந்து ஏகப்பட்ட சிக்கல்களும் பிரச்சனைகளும் வந்து விட்டது. இதனால் புதுசாக பிரச்சினை கொண்டு வர வேண்டும் என்பதால் கயலின் அண்ணி தனம் வில்லியாக மாறிவிட்டார். அத்துடன் கயல் மற்றும் எழில் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சொல்லி மொத்த வன்மத்தையும் தனம் காட்டுகிறார். இதைத் தாண்டி கயல் எப்படி அணுவின் நிலைமையை எடுத்து சொல்லி ஆப்ரேஷன் பண்ணப் போகிறார் என்பதுதான் அடுத்து வரப்போகும் கதையாக இருக்கிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.19 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

சிங்க பெண்ணே: தொடர்ந்து பல மாதங்களாக முதலிடத்தில் இருந்த சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் 8.35 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு போய்விட்டது. இதற்கு காரணம் சில வாரங்களாக ஆனந்தியின் கோழைத்தனமான செயல்களும், அன்பு ஆனந்திக்கு இடையே ஏற்பட்ட விரிசல் தான். பார்ப்பதற்கே போர் அடித்து விட்டது என்பதற்கு இருப்ப தொடர்ந்து அரைச்ச மாவை அரைத்துக் கொண்டு வந்ததால் பின்னடைவை சந்தித்து விட்டது.

மூன்று முடிச்சு: சூர்யாவின் நடிப்புக்கும் ஸ்டைலுக்கும் மட்டுமே இந்த நாடகம் மக்களை கவர்ந்து வருகிறது. அதனால் தான் இரண்டாவது இடத்தில் இருந்து இந்த வாரம் 8.49 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. மேலும் நந்தினி தன்னுடைய மனைவி என்று சொல்ல முடியாமல் தயங்கிய சூர்யா தற்போது யோசிக்க ஆரம்பித்து விட்டார். அதனால் இனி நந்தினி மற்றும் சூர்யாவுக்கு இடையே ஏற்பட போகும் புரிதல் கணவன் மனைவியாக வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கப் போகிறது.