Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி செய்த தவறுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் மறுபடியும் தப்புக்கு மேல் தப்பு பண்ணுகிறார். அந்த வகையில் சிட்டி கேட்டபடி முத்துவின் கார் சாவியை கொடுத்ததால் தற்போது முத்து இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டார்.
முத்து கார் ஓட்டிட்டு வரும்போது பிரேக் சரியாக வேலை செய்யாததால் டிராபிக் போலீஸ் அருண் பைக்கை இடித்து தள்ளிவிட்டார். இதனை பார்த்த அருண், முத்துவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய்விட்டார். அங்கே போனதும் முத்துவிடம் உன்னுடைய காரும் கிடைக்காது, டிரைவிங் லைசென்ஸ் நான் கேன்சல் பண்ணி காட்டுகிறேன் என்று சொல்கிறார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மீனா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, கோபத்துடன் இருக்கும் முத்துவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். ஆனால் அதற்குள் முத்து மற்றும் அருண் இடையே நடந்த பிரச்சனை வீடியோ மூலம் அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஒரு பக்கம் ரோகினி, மனோஜிடம் காட்டி இது உங்க அம்மாவுக்கு அவமானமாக இருக்காதா என்று ஏத்திவிட்டு பேசுகிறார்.
இன்னொரு பக்கம் விஜயா அந்த வீடியோவை பார்த்து அண்ணாமலையிடம் முத்துவை மட்டத்தட்டி பேசுகிறார். அடுத்ததாக சுருதி அந்த வீடியோவை பார்த்துவிட்டு ரவியிடம் காட்டி வீட்டிற்கு வருகிறார்கள். வந்த பொழுது ஸ்ருதி அம்மாவும் வீட்டிற்கு வந்து இதுதான் சான்ஸ் என்று ரவி சுருதியை கூட்டிட்டு போவதற்கு பிரச்சினை பண்ணுகிறார்.
அப்பொழுது வீட்டிற்கு வந்த முத்து மற்றும் மீனாவிடம், சுருதியின் அம்மா அவமானப்படுத்தி பேசுகிறார். இப்படி பேச பேச ரோகிணிக்கு ரொம்பவே சந்தோசமாகிவிட்டது. ஆனால் கடுப்பான மீனா திருப்பி பதிலடி கொடுக்கும் விதமாக கோபத்தை காட்டுகிறார். உடனே விஜயா, சம்பந்தி இடம் ஏன் இப்படி பேசுகிறாய் என்று மீனாவை திட்டுகிறார்.
அதற்கு என் புருஷன் தப்பே பண்ணவில்லை, ஆனால் வந்த வீடியோவை நம்பி எல்லோரும் இப்படி வாய்க்கு வந்தபடி பேசினால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என பதில் பேசுகிறார். அடுத்ததாக முத்துவின் கார் உண்மையிலேயே பிரேக் பிடிக்கவில்லை என்ற விஷயம் டிராபிக் போலீஸ் அருணுக்கு தெரிந்து விட்டது.
ஆனாலும் தெரிந்த உண்மையை வைத்து முத்து மீது தவறு இல்லை காரையும் திருப்பி கொடுத்து விடலாம் என்று கான்ஸ்டபிள் சொல்லிய பொழுது அதை அருண் கேட்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று முத்துவை பழிவாங்குவதற்கு பிளான் பண்ணி விட்டார். இந்த பிரச்சனை எல்லாம் சமாளிக்கும் விதமாக சீதா வந்து அருனிடம் முத்து யார் என்பதை சொன்னால் மட்டும் தான் தீர்வாக இருக்கும்.