Gettimelam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற கெட்டி மேளம் சீரியலில் வெற்றிக்கு துளசி மீது காதல் இருந்த நிலையில் அதை துளசியிடம் சொல்ல தயங்கினர். ஆனால் துளசிக்கு வேறொரு இடத்தில் கல்யாணம் ஏற்பாடு பண்ணியதும் யாருக்கும் தெரியாமல் துளசி கழுத்தில் திருட்டு தாலியை வெற்றி கட்டி விட்டார்.
இதனால் துளசிக்கு யார் நம்முடைய கழுத்தில் தாலி கட்டினார் என்பது தெரியாமல் தவித்து வந்தார். தற்போது மண்டபத்தின் வீடியோவை பார்த்த நிலையில் வெற்றிதான் தாலி கட்டினார் என்று துளசிக்கு தெரிந்து விட்டது. உடனே துளசி வெற்றி வீட்டிற்கு சென்று அனைவரது முன்னாடியும் வெற்றி தாலி கட்டிடத்தை சொல்லி லட்சுமியை கூட்டிட்டு வந்து விடுகிறார்.
ஆனாலும் வெற்றி செய்த தவறை குடும்பத்தில் இருப்பவர்கள் மன்னித்து விடும் அளவிற்கு பேசிவிட்டு வெற்றியின் அப்பா, பார்த்த பெண்ணுடன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவதற்கு தயாராகி விட்டார். ஆனால் வெற்றி இந்த ஜென்மத்தில் எனக்கு துளசி மட்டும்தான் மனைவி என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்பி துளசி வீட்டிற்கு வந்து விடுகிறார்.
துளசி குடும்பத்தில் இருப்பவர்களிடம் புரிய வைத்து எப்படியாவது தன்னுடைய காதலை துளசியுடன் சொல்ல வேண்டும் என்று வெற்றி அல்ல்படுகிறார். ஆனால் சிவராமன் மற்றும் லட்சுமி, வெற்றி மீது கோபத்தில் இருப்பதால் வீட்டுக்குள் விடாமல் தடுத்து விடுகிறார்கள். பிறகு வீட்டுக்குள் இருக்கும் துளசியிடம் தன்னுடைய காதலை சொல்லும் விதமாக வெற்றி அவருடைய காதலை சொல்கிறார்.
ஆனால் துளசி கேட்க மறுத்த நிலையில் ரகு இதை சான்ஸாக பயன்படுத்தி வெற்றி வீட்டுக்கு சென்று என் தங்கச்சி நிலைமைக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார். உடனே வெற்றியின் அப்பா, ரகுவை அடித்து வெளியே அனுப்பி விடுகிறார். பிறகு துளசி வீட்டில் இருக்கும் அண்ணியும் இந்த வீட்டை விட்டுப் போகிறேன் என்ற கிளம்புகிறார்.
இதனால் துளசி குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதால் சிவராமனுக்கு நெஞ்சுவலி வந்துவிடுகிறது. இதையெல்லாம் பார்த்த துளசி நம்மளால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வர வேண்டாம். இதற்கெல்லாம் காரணம் வெற்றி தான், வெற்றியை பழிவாங்க வேண்டும் என்று முடிவு பண்ணி துளசி வெற்றியுடன் போவதற்கு தயாராகி விட்டார். லட்சுமியும் துளசி எடுத்த முடிவுக்கு சம்மதம் கொடுத்து விடுவார்.