கெட்டி மேளம் சீரியலில் வெற்றிக்கு சாபத்தை கொடுத்த துளசி குடும்பம்.. அஞ்சலிக்கு வரும் ஆபத்து

Getti Melam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற கெட்டிமேளம் சீரியலில், தன் கழுத்தில் யார் தாலி கட்டினார் என்பது தெரியாமல் துளசி இத்தனை நாள் தவித்து வந்தார். ஆனால் தற்போது துளசிக்கு ஆதாரம் கிடைத்துவிட்டது. அந்த வகையில் அந்த வீடியோ ஆதாரத்தை பார்த்த துளசிக்கு தாலி கட்டியது வெற்றி தான் என்று தெரிந்து விட்டது.

அதே ஆக்ரோஷத்துடன் வெற்றி வீட்டிற்குப் போன துளசி, குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி என்னுடைய நிலைமைக்கு காரணம் வெற்றி தான் என்று சொல்லி விடுகிறார். இதைக் கேட்ட துளசி அம்மா, உனக்காக நான் கடவுளிடம் வேண்டி நீ நல்லா இருக்கணும் என்று பிரார்த்தனை பண்ணினேன்.

இப்பொழுது நானே சொல்கிறேன் நீ சந்தோஷமாகவே இருக்க மாட்டாய் என்று சாபம் கொடுக்கும் அளவிற்கு துளசி அம்மா திட்டி விடுகிறார். உடனே துளசி இனிமேலும் இங்கே நாம் இருக்கத் தேவையில்லை என்று அம்மாவை கூட்டிட்டு வெளியே போய் விடுகிறார்.

வெற்றி செய்த காரியத்துக்கு ஒட்டுமொத்த குடும்பமும் என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் நிற்கிறார்கள். ஆனால் வெற்றியை பார்ப்பதற்கும் பாவமாக இருக்கிறது, இதன் பிறகு எப்படி துளசியையும் துளசி குடும்பத்தையும் சமாதானப்படுத்தி அந்த வீட்டில் மருமகனாக போகப் போகிறார் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

இதனை அடுத்து அஞ்சலிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மகேஷ் மீது சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. அதிலும் செக்யூரிட்டி மூலம் கேட்ட கேள்வி எல்லாம் மகேஷுக்கு தெரிந்ததால் செக்யூரிட்டி நல்லவர் கிடையாது. குடித்துவிட்டு ஏதாவது வாய்க்கு வந்தபடி பேசக்கூடிய ஆளு என்று அஞ்சலி நம்பும் அளவிற்கு செக்யூரிட்டி மீது மொத்த பழியையும் போட்டு விடுகிறார்.

இதை நம்பாத அஞ்சலி அந்த செக்யூரிட்டி அப்படி எல்லாம் கிடையாது என்று சொல்கிறார். உடனே கோபப்பட்ட மகேஷ், என்னை விட உனக்கு செக்யூரிட்டி பற்றி தெரியுமா? நான் சொல்வதை நம்ப மாட்டியா என்று சைக்கோ மாதிரி கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். முழுமையாக மகேஷ் பற்றி தெரியாமல் அஞ்சலி படும் கஷ்டத்திற்கு இன்னும் அதிகமாக மகேஷ் சைக்கோ தனத்தால் ஆபத்தை சந்திக்க போகிறார்.

தற்போது துளசி மற்றும் அஞ்சலி இரண்டுவருடைய வாழ்க்கையும் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்யும் விதமாக வெற்றி தான் துளசி மனசை மாற்றி அந்த குடும்பத்தில் ஒருவராக போயி அஞ்சலியையும் காப்பாற்றுவார்.