பித்தலாட்டம் பண்ணிய ரோகிணிக்கு பதிலடி கொடுக்கப் போகும் விஜயா.. முத்துவை எதிர்க்கும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் தன் பக்கம் வர வேண்டும் என்பதற்காக ரோகினி புதுசாக மகேஷ் என்பவரிடம் பேசுவது போல் ட்ராமா பண்ணுகிறார். ரோகிணியின் ட்ராமாவை நம்பி மனோஜும் பயப்பட ஆரம்பித்து விட்டார். உடனே ரோகிணி போனில் இருந்து அந்த நம்பரை எடுத்து பேசுவதற்கு தயாராகி விட்டார்.

அடுத்ததாக நீத்து, பிசினஸ் விஷயமாக பேசுவதற்கு ரவி வீட்டுக்கு வருகிறார். வந்ததும் புதுசாக கடை ஓபன் பண்ண போகிறோம் அதற்கு ரவி ஒர்கிங் பார்ட்னராக சேர்த்துக் கொள்வதற்காக பேச வந்தேன் என்று சொல்கிறார். உடனே ஸ்ருதி, நீங்க தான் அன்னைக்கு ரவி திறமையால் இந்த ஹோட்டல் வளரவில்லை என்று சொன்னீங்க. இப்பொழுது அவனுடைய திறமையை பாராட்டி நீங்களே ஒர்க்கிங் பாட்னராக சேர்த்துக் கொள்ள வந்திருக்கீங்க என கேட்கிறார்.

உடனே நீத்து ஆரம்பிச்ச விஷயம் ஒன்னு நடந்த வாக்குவாதம் வேற மாதிரி போய்விட்டது. அதெல்லாம் சரி செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் ரவியின் திறமையை பாராட்டி இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்து இருக்கிறேன் என்று சொல்கிறார். உடனே ஸ்ருதியும் ரவியை தனியாக கூப்பிட்டு நான் அன்னைக்கு நீத்துவிடம் பேச போய் தான் தற்போது உனக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

அதனால் நீ இந்த அங்கீகாரத்தை ஏற்றுக்கொள், ஆனால் நான் எப்பொழுது கடையை ஆரம்பித்து தனியாக நடத்த வேண்டும் என்று சொல்கிறானோ அப்பொழுது நீ என் கூட வந்து விட வேண்டும் என்று கண்டிஷன் போட்டு விடுகிறார். ரவிக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் நீத்துவிடம் சரி என்று சொல்லிவிடுகிறார். அடுத்து விஜயா, நீத்து ஒரு கோடிஸ்வரி வீட்டு பொண்ணு என்பதால் ரோகிணியை விரட்டி விட்டு மனோஜ்க்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணிட்டார்.

இந்த முடிவை பார்வதியிடம் சொல்லிய பொழுது பார்வதி முதல் பொண்டாட்டி இருக்கும் பொழுது இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க கூடாது என்று சொல்கிறார். உடனே விஜயா, அவர்களை பிரிப்பதற்கு நான் நல்ல ஐடியா வைத்திருக்கிறேன் என்று சொல்லி ரோகிணிக்கு ஆப்பு வைப்பதற்கு தயாராகி விட்டார். அடுத்ததாக சீதா, அருணை மறக்க முடியாமலும் அருணும் சீதா ஞாபகத்தில் இருப்பதால் அருணின் அம்மா, மீனாவிடம் பேசுகிறார்.

மீனாவுக்கும் சீதாவின் நிலைமை நன்றாக புரிந்ததால் எப்படியாவது அருணுக்கும் சீதாவுக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் முத்துவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் சீதாவின் கல்யாணம் நினைத்தபடி நடக்க வேண்டும் என்பதற்காக மீனா தயாராகி விட்டார்.