ரோகினியை வெட்டிவிட்டு நீத்துவை மனோஜ்க்கு கோர்த்து விடும் விஜயா.. அடாவடியாக இருக்கட்டும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதாவின் காதல் நிறைவேற வேண்டும் என்று நினைக்கும் சத்தியா, முத்து மற்றும் மீனாவை சந்தித்து பேசுகிறார். அப்பொழுது மீனாவுக்கு, சீதா அருணை கல்யாணம் பண்ணிக் கொடுப்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்பது தெரிந்து விட்டது. அதனால் மீனா மற்றும் சத்யா இருவரும் சேர்ந்து முத்து மனசை மாற்றுவதற்கு முயற்சி எடுக்கிறார்கள்.

ஆனால் முத்து, சீதாவையும் புரிந்து கொள்ளவில்லை சத்தியா என்ன சொல்ல வருகிறான் என்று கேட்கவும் விருப்பமும் இல்லாமல் அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார். தான் வச்சதுதான் சட்டம், தன்னுடைய கண்ட்ரோலில் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பில் ஓவராக குதிக்கிறார். இதனால் சத்தியா இவரிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று முடிவுக்கு வந்து விட்டார்.

அடுத்ததாக ரவி புதுசாக ஹோட்டல் ஓபன் பண்ணி ஆக வேண்டும் என்று சுருதி அதற்கான இடத்தை பார்த்து களத்தில் இறங்கி விட்டார். ஆனால் ரவிக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை இருந்தாலும் சுருதி பிடிவாதமாக இருப்பதால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ரவி வீட்டுக்கு நீத்து வருகிறார்.

அப்பொழுது விஜயா மனோஜ் ரோகினி மட்டும் இருப்பதால் நீத்துவிடும் விஜயா பேச்சு கொடுக்கிறார். உடனே நீத்து புதுசாக ரெண்டு மூணு ஹோட்டல் ஓபன் பண்ண போகிறேன். அது விஷயமாக ரவியை பார்த்து பேச வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். உடனே விஜயா 2 கோடி 3 கோடி ஆகுமா என்று கேட்கிறார். அதற்கு நீத்து 20 கோடி கிட்ட ஆகும் என்று சொல்லிய நிலையில் விஜயா வாய் அடைத்து போய்விட்டார்.

மனோஜும் கேட்டுக் கொண்டிருக்கிறார். உடனே விஜயா, பேசாமல் ஒன்னும் இல்லாமல் பித்தலாட்டம் பண்ணி வந்த ரோகிணியை வெட்டிவிட்டு மனோஜ்க்கு இந்த நீத்துவை கல்யாணம் பண்ணி வைத்தால் நன்றாக இருக்குமே என்று கற்பனை பண்ணி பார்க்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் கல்யாண கோலத்தில் மனோஜ் மற்றும் நீத்து வீட்டுக்கு வருவது போல் விஜயா யோசித்துப் பார்க்கிறார்.

இதைப்பற்றி விஜயா மனோஜிடம் சொன்னாலும் மனோஜும் பேராசையில் சரி என்று சொல்லி அம்மாவின் ஆசை படி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாலும் சொல்லிவிடுவார். ஆனால் இந்த ரோகினி இது பற்றி யோசிக்காமல் மனோஜை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக மகேஷ் என்பவரிடம் போனில் பேசிக்கொண்டு மனோஜை சீண்டிகொண்டு வருகிறார். இதனால் மனோஜும் இனி நீத்து உடன் பேச ஆரம்பித்து விடுவார்.