Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய தமன்.. இதுக்கு அனிருத் எவ்வளவோ பரவால்ல

தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய தமன்.. இதுக்கு அனிருத் எவ்வளவோ பரவால்ல

இவ்வாறு வளர்ந்து வரும் இசையமைப்பாளராய் தமனின் இத்தகைய செயல் டோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

Music Director Thaman: படத்திற்கு சிறப்பு கூட்டும் பாடல்களை இசை அமைப்பதில் ஏ ஆர் ரகுமான் மற்றும் அனிருத்-க்கு இணையாக மாஸ் காட்டி வருபவர் தான் தமன். இவரின் பாடலுக்கு என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இவரால் தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்டு வரும் சிக்கல் குறித்த தகவலை இங்கு காணலாம்.

ஏ ஆர் ரகுமான் மற்றும் அனிருத் இசைக்கு போட்டியாக விஜய்யை வைத்து வாரிசு படத்தில் வெற்றி கண்டவர் தான் தமன். தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களுக்கு ஆர்வம் காட்டி வரும் இவர் தற்பொழுது ஒரு பாடலுக்கு இத்தகைய தொகையை தயாரிப்பாளர் மீது போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

டோலிவுட்டில் இவர் பாடலுக்கு என்று எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், தனக்கென்று தனி ஸ்டூடியோ கூட இல்லாதவராக ஹோட்டல் ஹயாத்தில் தஞ்சம் அடைந்து வருகிறார். அங்கிருந்தவாறு பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்தும் வருகிறார்.

சமீபத்தில் வெளியான தசரா படத்தில் ஒரு பாடலை இசை அமைத்த இவர் அப்பாடலுக்கும் சேர்த்து தன் ஹோட்டல் பில்லையும் தயாரிப்பாளர் தரப்பில் ஒப்படைத்துள்ளார். சொகுசு ஹோட்டலில் தங்கியுள்ள இவரின் பில்லை கண்டு இடி விழுந்தவாறு தயாரிப்பாளர் தரப்பில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இவர் பாடலுக்கு இசையமைக்க கேட்கும் சம்பளத்தை விட இவரின் ஹோட்டல் பில் சுமார் 40 லட்சம் தயாரிப்பாளரை பீதி அடைய செய்துள்ளது. இவ்வாறு வளர்ந்து வரும் இசையமைப்பாளராய் தமனின் இத்தகைய செயல் டோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

விஜய்யின் பாடலின் வெற்றிக்கு பிறகு இவரின் நடவடிக்கை இவ்வாறு தான் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். டோலிவுட்டில் சிறந்த இசையமைப்பாளர் என்ற பெயரை பெற்ற இவர் இது போன்ற செயல்களால் தன் மார்க்கெட்டை இழக்கவும் வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டு வருகிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.