பிளாஸ்டிக் சர்ஜரியால் விகாரமான முகம்.. விபரீதத்தில் முடிந்த நடிகையின் ஆசை

Gossip: நடிகைகளுக்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதியே அழகு தான். திறமை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அழகு இருந்தால் போதும் என்ற நிலை தான் இப்போது இருக்கிறது.

அதனாலயே ஹீரோயின்கள் இதற்காக ரொம்பவும் மெனக்கெடுகிறார்கள். அப்படித்தான் பார்பி டால் போல் அழகாக இருந்த நடிகை இப்போது விகாரமாக மாறி இருக்கிறார்.

உச்ச நடிகர் ,மாஸ் நடிகர் என அனைவருடனும் நடித்த இந்த நடிகை இப்போது தாய் மண்ணில் வசித்து வருகிறார். ஏற்கனவே ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்ற நடிகை இப்போது பிரபல நடிகரை திருமணம் செய்ய இருக்கிறார்.

நடிகை செய்த பிளாஸ்டிக் சர்ஜரி

இந்த சூழலில் சமீபத்தில் நடிகையின் முகத்தை பார்த்த பலரும் அதிர்ந்து தான் போயிருக்கிறார்கள். அதாவது குழந்தை போல் இருந்த அவருடைய முகம் இப்போது சீக்குவந்த கோழி போல் மாறி இருக்கிறது.

நடிகையும் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார். இதை பார்த்த பலரும் நடிகைக்கு உடல் ரீதியாக ஏதாவது பிரச்சனையா என கேட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையில் நடிகை அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அவர் ஏகப்பட்ட செலவும் செய்தாராம். ஆனால் நடிகை எதிர்பார்த்த ரிசல்ட்டு தான் கிடைக்கவில்லை.

ஏற்கனவே பல பாலிவுட் நடிகைகள் இது போல் விஷப்பரிட்சையில் இறங்கி தோல்வியை கண்டு இருக்கின்றனர். அப்படித்தான் இந்த நடிகையின் ஆசையும் விபரீதத்தில் முடித்திருக்கிறது.

திரை பிரபலங்களின் கிசு கிசு செய்திகள்

Next Story

- Advertisement -