ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

முதல் படத்திலேயே கதையின் நாயகியாக நடித்தவர் தான் அந்த நடிகை. அந்தப் பட ஹீரோவின் அழகில் மயங்கி அவரை சுற்றி சுற்றி வந்த நடிகையை அந்த ஹீரோ கொஞ்சம் கூட கண்டு கொள்ளவே இல்லையாம். ரொம்பவும் கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அந்த நடிகர் இப்போது வரை சாக்லேட் பாய் இமேஜுடன் இருக்கிறார்.

அந்த நடிகரின் நிராகரிப்பை தொடர்ந்து நடிகை வேறு ஒரு பாடி பில்டர் நடிகரை காதலிக்க ஆரம்பித்திருக்கிறார். பொதுவாகவே பெண்கள் விஷயத்தில் வீக்காக இருக்கும் அந்த நடிகர் எந்த ஹீரோயினாக இருந்தாலும் சொடக்கு போடும் நேரத்தில் கரெக்ட் செய்து விடுவாராம். அவரை தீவிரமாக காதலித்த நடிகையை ஒரு கட்டத்திற்கு பிறகு அந்த நடிகர் கழட்டி விட்டிருக்கிறார்.

அதன் பிறகு அந்த நடிகை தன்னை நேசித்த ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு இன்று குடும்பம் குழந்தை என்று வாழ்ந்து வருகிறார். அதாவது நடிகையை அறிமுகப்படுத்திய இயக்குனர் முதல் படத்திலேயே அவரின் மீது தீராத காதல் கொண்டிருக்கிறார். இது தெரியாத நடிகை ஆணழகு நடிகர்களின் பின்னால் சுற்றி சுற்றி வந்திருக்கிறார்.

இது தெரிந்தும் கூட இயக்குனருக்கு நடிகையின் மீது இருந்த காதல் கொஞ்சம் கூட குறையவே இல்லையாம். இதையெல்லாம் பார்த்த நடிகை பழைய கதைகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு உண்மையான அன்புடன் அந்த இயக்குனரை திருமணம் செய்து இருக்கிறார். தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கும் அந்த நடிகை அரசியலில் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தன்னைவிட அழகாக இருக்கும் தன்னுடைய மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தவும் அவர் முயற்சி செய்து வருகிறாராம். இதற்காக கோலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஒரு இயக்குனரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறாராம். விரைவில் பிரபல வாரிசு நடிகருக்கு ஜோடியாக தன் மகளை களம் இறக்கவும் அவர் தயாராகி வருகிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →