நம்பியவர்களால் அதை கொடுத்து பலவந்தப்படுத்தப்பட்ட நடிகை.. ஸ்கூல் படிக்கும்போதே நடந்த கொடூரம்

ரொம்பவும் துணிச்சலானவர் என்று பெயர் எடுத்த அந்த நடிகை திரையுலகில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் கூட மனதில் பட்டதை பட்டென்று பேசக்கூடியவர். அதனால் எந்த பிரச்சனை வந்தாலும் எனக்கு கவலை இல்லை என்பது போல தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்து அதை செயல்படுத்தவும் கூடியவர்தான் அந்த நடிகை.

சமீபகாலமாக தோல்வி படங்களை கொடுத்து வந்தாலும் அந்த நடிகை தன்னுடைய கெத்தை விட்டுக் கொடுக்காமல் அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி எப்போதும் ஒரு சர்ச்சை வட்டத்திற்குள்ளாகவே இருக்கும் அந்த நடிகை சோலோ ஹீரோயின் கதைகளை தான் அதிகம் தேர்ந்தெடுத்து நடிப்பார்.

அதேபோன்று ஆண்களையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்தி விடுவார். இப்படி இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகை சிறு வயதிலேயே மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நம்பியவர்களாலேயே உடல்ரீதியாக பலவந்தப்படுத்தப்பட்ட கொடுமைக்கும் இவர் ஆளாகி இருக்கிறார்.

அதாவது பள்ளிக்கூடம் படிக்கும் போதே இவருக்கு நெருங்கிய நபர் ஒருவர் போதை மருந்து கொடுத்து இவரை பலவந்தப்படுத்தி இருக்கிறார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்த நடிகை சினிமாவில் சாதிக்க ரொம்பவும் போராடி இருக்கிறார். ஆனாலும் அவர் ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தார். அப்போது இவரை வளர்த்து விட்ட ஒரு இயக்குனரே இவரை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்.

அந்த விஷயத்தை நடிகை போலீஸ், மீடியா என பகிரங்கப்படுத்தி தைரியமாக கையாண்டார். இப்படி பல இன்னல்களுக்கு ஆளான நடிகை தன்னுடைய தைரியத்தை மட்டும் விட்டு விடாமல் இப்போது சினிமாவில் ஒரு பெரிய அந்தஸ்தில் இருக்கிறார். 35 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அந்த நடிகை தற்போது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு சவாலான வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →