வெள்ளிக்கிழமை, அக்டோபர் 25, 2024

ஆள் இருக்கு, யாருன்னு சொல்லமாட்டேன்.. மீண்டும் குப்புற விழுந்த வனிதா

விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையான வனிதா விஜயகுமாரை பார்த்த சினிமா ரசிகர்களோ கட்டினால் இது போன்ற குடும்ப குத்துவிளக்கை தான் கட்டணும் என்றார்கள். கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த நிலையில் நடிக்க வந்த வேகத்தில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

அது தான் அவர் பண்ண பெரிய தப்பு என்றே சொல்லலாம். குடும்ப பெண்ணாக மாறிய வனிதா அந்த திருமணம் மூலம் விஜய் ஸ்ரீஹரி, ஜோவிகா என்கிற பிள்ளைகளுக்கு தாயானார். இருப்பினும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

அதற்கு பின் ஒரு திருமணம் செய்தார் ஜைனித்தா என்று ஒரு பெண் பிள்ளையை பெற்றெடுத்தார். இப்படி இருக்க அந்த திருமணமும் நிலைக்கவில்லை. அதற்க்கு பிறகு ராபர்ட் மாஸ்டரிடம் காதல் வயப்பட்டார்.

ஆனால் அந்த திருமணமும் நிலைக்கவில்லை. இந்த நிலையில் இப்போது வரை இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள். லாக்டவுன் நேரத்தில் பீட்டர் பால் மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார் வனிதா. திருமணமும் செய்தார், அதுவும் நிலைக்கவில்லை.

மீண்டும் மீண்டுமா?

தற்போது தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஜோவிகாவை நல்லபடியாக வளர்த்து வருகிறார். இந்த நிலையில் வனிதா அக்காவுக்கு மீண்டும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் இந்த முறை மிகவும் தெளிவாக இருக்கிறார்.

குறிப்பாக மீடியாவிடம் சொல்லுவதாக இல்லை. சொன்னாலே எதாவது ஏடாகூடமாகிவிடுகிறது. மேலும் ஒரு சிலர் ரசிகர்கள், இந்த முறையாவது நீங்கள் சரியானவரை சூஸ் பண்ணி இருக்க வேண்டும் என்று அந்த இறைவனை வேண்டுகிறோம்.

இந்த முறையாவது, உங்கள் காதல் திருமணத்தில் முடியாமல், கடைசி வரை வரும் ஒரு வாழ்க்கை துணையாக இருக்கவேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News