வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்.. தீராத பிரச்சனை, டிக்கெட் புக் செய்தவர்கள் நிலை என்ன.?

Veera Dheera Sooran: அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் இன்று வெளியாகிறது. எஸ்.ஜே சூர்யா, துஷாரா என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே படத்தின் டிரைலர் பாடல்கள் என அனைத்தும் ட்ரெண்டிங்கில் கலக்கியது. அதேபோல் பட குழுவும் கடந்த சில நாட்களாக தீவிர ப்ரோமோஷனில் ஈடுபட்டு வந்தனர்.

விக்ரமுக்கு இப்படம் மாபெரும் வெற்றியாக இருக்கும் என சினிமா விமர்சகர்களும் கூறி வந்தனர். அதை தொடர்ந்து டிக்கெட் புக்கிங் லாபகரமாக இருந்தது.

இப்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் இன்று காலை தமிழ்நாட்டில் ஒன்பது மணிக்கு வெளியாக இருந்தது. ஆனால் நீதிமன்றம் பட வெளியீட்டுக்கு 10:30 வரை இடைக்கால தடை விதித்துள்ளது.

வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்

அதாவது B4U நிறுவனமும் இப்படத்தில் பண முதலீடு செய்துள்ளனர். அதனால் தயாரிப்பாளர் டிஜிட்டல் உரிமையை இவர்களுக்கு கொடுத்துள்ளார்.

ஆனால் டிஜிட்டல் உரிமை விற்கப்படுவதற்கு முன்பே ரிலீஸ் செய்தியை அறிவித்து விட்டனர். இதனால் அந்த வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

அதன் காரணமாக பட வெளியீட்டை நிறுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அதை விசாரித்த நீதிபதி அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளார்.

இதனால் தற்போது முதல் காட்சி தள்ளிப் போயிருக்கிறது. ஆனால் நீதிமன்றம் விரைவில் இதை விசாரித்து சுமுகமான தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் படம் 11 மணி அளவில் வெளியாகும் என்ற தகவல்களும் கசிந்துள்ளது. ஏற்கனவே தங்கலான் படத்திலும் இப்படி ஒரு பிரச்சனையை விக்ரம் எதிர்கொண்டார்.

அதேபோல் அவர் மிகவும் எதிர்பார்த்த துருவ நட்சத்திரம் பல வருடங்களாக வெளிவராமல் இருக்கிறது. இந்த சூழலில் இப்படத்திற்கும் இப்படி ஒரு சிக்கல் வந்துள்ளது டிக்கெட் புக் செய்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருந்தாலும் சீயான் ரசிகர்கள் மனம் தளராமல் காத்திருக்கின்றனர். எது எப்படியோ படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்ற செய்திகளும் பரவி வருகிறது.

Leave a Comment