Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த விஷ்ணு விஷால்.. என்னது இத்தனை கோடியா.!

ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த விஷ்ணு விஷால்.. என்னது இத்தனை கோடியா.!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள எஃப் ஐ ஆர் படத்தில் ஒரு முஸ்லிம் இளைஞனாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரெபா மோனிக்கா, மஞ்சிமா மோகன், பிக் […]

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள எஃப் ஐ ஆர் படத்தில் ஒரு முஸ்லிம் இளைஞனாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் ரெபா மோனிக்கா, மஞ்சிமா மோகன், பிக் பாஸ் ரைசா வில்சன், கௌரவ் நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர். எஃப் ஐ ஆர் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தயாராக இருந்தது. பல காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. எஃப் ஜ ஆர் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கி வெளியிடுகிறது.

இப்படத்தை கௌதம் மேனனின் உதவி இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். எஃப் ஐ ஆர் படம் திரையரங்கு உரிமையை சேர்க்காமல் சுமார் 22 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்டமான ப்ரீ-ரிலீஸ் வியாபாரம் செய்துள்ளதால் படத்தை லாபத்தில் கொண்டு போய் உள்ளது. இதில் பெரும்பாலும் சாட்டிலைட், ஓடிடி, ஹிந்தி டப்பிங் உரிமைகள் போன்றவற்றால் லாபத்தை அடைந்துள்ளது.

எஃப் ஐ ஆர் படம் தயாராகி பல நாள் ஆனாலும் விஷ்ணு விஷாலின் சரியான வணிக ஒப்பந்தத்திற்கான காத்திருந்தது இந்த லாபத்தை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. நல்ல நடிகராக மட்டுமல்லாமல் தற்போது இப்படத்தின் மூலம் லாபகரமான தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார்.

எஃப் ஐ ஆர் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள். ராட்சசன் போல் எஃப் ஜ ஆர் படமும் விஷ்ணு விஷாலுக்கு மிகப் பெரிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

fir-collection
fir-collection
A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.