சார்பட்டா பட வெற்றியை தொடர்ந்து 2 மடங்கு சம்பளத்தை உயர்த்திய ஆர்யா.. கமலஹாசனுக்கு நெருக்கடி

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகர்கள் ஆரம்பத்தில் கொடுக்கும் சம்பளத்தை வாங்கி நடிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் இவருடைய படங்கள் வெற்றி அடைந்து விட்டால் உடனே தனது சம்பளத்தை பலகோடி ஏற்றி விடுவார்கள் அப்படித்தான் முதலில் 10 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் டாக்டர் படம் 100 கோடி வசூல் பெற்றதால் தனது சம்பளத்தை 20 கோடி சம்பளம் ஏற்றினார். தற்போது அதே வரிசையில் ஆர்யாவும் இடம் பிடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கினார். 80 காலகட்டத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா, நடிகர் பசுபதி உள்ளிட்டோர் நடித்திருப்பர். குத்துச்சண்டை காட்சிகள் இந்த படத்தில் அற்புதமாக படமாக்கபட்ட நிலையில் ரசிகர்களிடம் பெரும் வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படத்திற்காக ஆர்யா கடினமான உடற்பயிற்சி மேற்கொண்டார். அவருடைய சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட திரைப்படமாக சார்பட்டா பரம்பரை திரைப்படம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்க இருந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிகர் ஆர்யாவை நடிக்க வைத்து இந்த படத்தை தான் தயாரிப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். கமலஹாசன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்தும் கூட அவர் பாதியிலேயே சென்றார். அவருக்கு பதிலாக சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது கூடுதல் தகவல். இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தை நடித்து வருகிறார்.

இது தவிர வேறு எந்த திரைப்படமும் கமல்ஹாசனின் கையில் இல்லை. இந்த நிலையில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களை வைத்து தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக படங்களை தயாரிக்க திட்டமிட்டு வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை நடிகர் கமலஹாசன் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. தற்போது ஆர்யாவை வைத்து நடிகர் கமலஹாசன் படம் தயாரிக்க திட்டமிட்டிருக்கும் நிலையில் நடிகர் ஆர்யா தன்னுடைய சம்பளத்தை மூன்று மடங்காக உயர்த்தி இருக்கிறார்.

அதாவது 5 கோடியாக இருந்த ஆர்யாவின் சம்பளத்தை தற்போது 15 கோடி கொடுத்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன் என ஆர்யா கண்டிஷனாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட கமல் அதிர்ச்சி அடைந்து பின் அதற்கு ஓகே சொல்லி உள்ளார். இதன்மூலமாக ஆர்யாவின் காட்டில் காசு மழை பொழிகிறது என்று ரசிகர்களும் திரை வட்டாரத்தில் இருப்பவர்களும் தெரிவித்து வருகின்றனர்