பீஸ்ட் படம் ஒன்னு காப்பி இல்லை.. கோபத்தில் கொந்தளித்த நெல்சன்

நடிகர் விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அனிரூத் இசையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்துவிட்ட நிலையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இத்திரைப்படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் குறித்து தற்போது பேட்டி அளித்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் .

ஒரு மாலில் பொதுமக்களை துப்பாக்கி முனையில் ஹைஜாக் செய்யும் தீவிரவாதிகளிடமிருந்து நடிகர் விஜய் காப்பாற்ற போராடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. ரத்தம் தெறிக்கும் இந்த ட்ரெய்லரில் வீரராகவன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் மாசாக நடித்துள்ளார். என்னளவில் இந்த ட்ரெய்லர் நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான கூர்க்கா திரைப்படத்தின் காட்சிகள் போல அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது நெல்சன் திலீப் குமார் பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர் பொதுமக்களை ஹைஜாக் செய்யும் கதைக்களம் சினிமாவிற்கு புதிதல்ல ஏற்கனவே பல திரைப்படங்களில் இது போன்ற கதைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் பீஸ்ட் திரைப்படம் அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு இருக்கும் இருந்தாலும் மற்ற திரைப்படங்களில் இடம்பெற்ற சில காட்சிகள் வருவதை தவிர்க்க முடியாது. அதுமட்டுமின்றி இத்திரைப்படம் மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸ் போன்று எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

மேலும் இது குறித்து பேசிய நெல்சன், மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸிலும் துப்பாக்கிகள் வைத்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதை மட்டும் வைத்துக்கொண்டு பீஸ்ட் திரைப்படமும் அதுபோல தான் என்று கூறுவது சரியானது அல்ல, இது விஜய் சார்காக எடுக்கப்பட்ட திரைப்படம். அதனால் கண்டிப்பாக பீஸ்ட் படம் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது பல தரப்பினரையும் கவரும் என்றார். மேலும் இப்படத்தில் முஸ்லிம் தீவிரவாதிகள் இடம்பெற்றது போன்ற காட்சிகள் பீஸ்ட் ட்ரெய்லரில் அமைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பேசிய நெல்சன் திலீப்குமார், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இத்திரைப்படம் கட்டாயம் இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸுக்கு குவைத் அரசு தடை விதித்துள்ள நிலையில் தங்கள் நாட்டில் இருக்கும் மக்களுக்கு காண்பிக்கப்படும் படங்களில் தீவிரவாதம் போன்ற காட்சிகள் இடம்பெற்ற படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்பதில் குவைத் அரசு திட்டவட்டமாக உள்ளது.

மேலும் இத்திரைப்படத்தின் எடிட்டர் நிர்மல் குமார் பேசியபோது, பீஸ்ட் திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் என்றும் அதிலும் முக்கியமாக விஜய்யின் சண்டைக்காட்சிகள் அதிரடியாக அமைந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் 10 வெர்ஷனை கட் செய்ததற்கு பின்னர் தான் இந்தப் படத்தின் அவுட் வெளியானது என்று அவர் தெரிவித்தார். மேலும் கண்டிப்பாக இத்திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.