நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அந்த திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. அதனால் பீஸ்ட் திரைப்படம் சில எதிர்மறை கருத்துகளையும் சந்தித்தது.
இந்நிலையில் ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை விமானி சிவராமன் வெளியிட்ட டிவிட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் பீஸ்ட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து சில கேள்விகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது அந்த திரைப்படத்தில் விஜய் ரா உளவுத்துறை அதிகாரியாக நடித்திருப்பார்.
மேலும் அவர் கிளைமாக்ஸ் காட்சியில் தனியாக ஜெட் விமானத்தில் பாகிஸ்தானுக்குள் சென்று தீவிரவாதியின் தலைவனை பிடித்துக் கொண்டு வருவார். அப்போது நடைபெறும் தாக்குதலில் அவர் சுலபமாக தப்பித்து வந்து விடுவார். இதைப் பற்றிதான் விமானப்படை விமானி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுவாக போர் விமானங்கள் இயக்கப்படும் போது அதை இயக்குபவர்கள் ஆக்ஸிஜன் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் ஆகியவற்றை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஜெட் விமானம் வேகமாக செல்லும்போது நமக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பது சற்று சிரமம்.
மேலும் அந்த அதிகப்படியான இரைச்சல் நம் காதுகளையும் பாதிக்கும். அதனால்தான் அவர்கள் ஆக்சிஜன் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் ஆகியவற்றை அணிந்து இருப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட அந்த காட்சியில் விஜய் அப்படி எதுவும் அணிந்திருக்க மாட்டார். இது நிஜத்தில் எப்படி சாத்தியமாகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேபோன்று விஜய் ஜெட்டில் வரும்போது எதிரே மற்றொரு ஜெட்டில் வரும் பெண் விமானி அவரைப் பார்த்து சல்யூட் அடிப்பார். இவ்வளவு வேகத்தில் ஜெட் விமானம் வரும் போது எதிரே வரும் ஜெட் விமானம் கண்மூடி திறப்பதற்குள் கடந்து சென்றுவிடும்.
ஆனால் சல்யூட் அடிப்பது போன்று இடம்பெற்றுள்ள அந்த காட்சி ரொம்ப ஓவர் என்று தற்போது பலராலும் கலாய்க்கப்பட்டு வருகிறது. இப்படி பல லாஜிக் மீறல்கள் திரைப்படத்தில் இருக்கிறது என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். இதன் மூலம் தற்போது பீஸ்ட் சர்வதேச அளவில் ட்ரெண்டாகி வருகிறது.