நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.
படத்தை பார்த்த பலரும் விஜய் ஒருவருக்காக இந்த படத்தை பார்க்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் விஜய்யே நொந்து போகும் அளவுக்கு ஒரு விஷயம் நடந்துள்ளது. ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்திற்கு வந்த கமெண்டுகளால் அப்செட்டில் இருந்த விஜய் தற்போது படத்தின் காட்சியை சிலர் கேலி, கிண்டல் செய்வதை பார்த்து கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.
அதாவது கடந்த இரு தினங்களுக்கு முன்பு விமானப்படை அதிகாரி ஒருவர் பீஸ்ட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து சில கேள்விகளை எழுப்பினார். அதை பார்த்த நெட்டிசன்கள் தற்போது அந்த காட்சியில் இருக்கும் சில லாஜிக் மீறல்களை புட்டுப்புட்டு வைத்துள்ளனர்.
இந்த விஷயம் சோசியல் மீடியாவில் டிரெண்ட் ஆகி தற்போது படத்தின் மானம் சர்வதேச அளவில் பறிபோயுள்ளது. இதனால் கடுப்பான விஜய் நெல்சனை கூப்பிட்டு சில வார்னிங் கொடுத்துள்ளார். அதாவது நெல்சன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க போகிறார்.
அதை குறிப்பிட்டு பேசிய விஜய் இந்த தவறு எல்லாம் என் படத்தோடு போகட்டும். ஆனால் தலைவரின் படத்தில் இது போன்று எதுவும் சொதப்பி விடாதீர்கள். முதலில் கதையை நன்றாக தயார் செய்துகொண்டு, அதில் இருக்கும் விஷயங்களை எல்லாம் தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த வாய்ப்பையும் நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், இனி சினிமாவில் உங்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் போய்விடும் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ந்து போன நெல்சன் தற்போது தலைவர் படத்தின் கதையை பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கிறாராம்.
டாக்டர் படம் வெற்றி பெற்ற நினைப்பிலும், விஜய் போன்ற மாஸ் நடிகரின் கால்ஷீட் எளிதாக கிடைத்து விட்டது என்ற மிதப்பில் தான் நெல்சன் இப்படி சரியான பயிற்சி இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார். வேண்டுமென்றே அவர் விஜய்யை வைத்து படத்தை இப்படி சொதப்பி விட்டதாக தளபதியின் ரசிகர்கள் நெல்சன் மீது தீராத கோபத்தில் இருக்கின்றனர்.