விஜய் கேட்கிற சம்பளத்தை விட கொட்டிக் கொடுக்கும் 5 தயாரிப்பாளர்கள்.. தளபதி கால் சீட் மட்டுமே தேவை

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக பார்க்கப்படும் விஜய்யின் ஒவ்வொரு படங்களும் அசால்டாக 300 கோடியை வாரிக் குவிப்பதால் அவருடைய கால் சீட் கிடைப்பதற்காக தயாரிப்பாளர்கள் தவமாய் தவம் கிடக்கின்றனர். இதற்காக விஜய் கேட்கிற சம்பளத்தை விட, அதற்கு அதிகமாகவும் கொட்டிக் கொடுக்க இந்த 5 தயாரிப்பாளர்களும் வரிசை கட்டி காத்திருக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ்: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் சன் பிக்சர்ஸ் கடைசியாக விஜய்யின் பீஸ்ட் படத்தை தயாரித்தது. இந்த படத்திற்கு சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் படம் வசூலில் சக்கை போடு போட்டது. அதிலும் இந்த படம் சில நாட்களிலேயே பல கோடியை வசூலித்து லாபம் பார்த்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதற்கு முன்பாக விஜய்யின் சர்கார் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது.

லைக்கா: 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தை தயாரித்து ஹிட் கொடுத்த லைக்கா ப்ரொடக்ஷன், அதன் பிறகு விஜய்யின் படத்தை தயாரிப்பதற்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர். இதற்காக அவர்கள் விஜய் கேட்கிற சம்பளத்தை விட அதிகமாக கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர்.

ஏஜிஎஸ்: கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த பிகில் படத்தை தயாரித்தது. மேலும் இந்த நிறுவனம் விஜய்யின் கால்ஷீட் கிடைக்க வேண்டும் என அவர் கேட்கிற சம்பளத்தை விட அதிகமாக கொட்டிக் கொடுக்க தயாராக உள்ளது.

லலித்: 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளர் லலித் குமார் இதற்கு முன்பு விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தை தயாரித்து மாபெரும் ஹிட் கொடுத்தார். தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி தாறுமாறாக பட்டையை கிளப்பிய நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

சேவியர் பிரிட்டோ: 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தை சேர்ந்த சேவியர் பிரிட்டோ விஜய்யின் மாஸ்டர் படத்தில் இணைந்து, தயாரிப்பாளராக பணி புரிந்தார். இந்த படத்திற்குப் பிறகு மறுபடியும் விஜய்யின் கால் சீட் கிடைப்பதற்காக, எவ்வளவு சம்பளம் வேணாலும் கொடுக்க தயார் என காத்திருக்கிறார்.

இவ்வாறு இந்த 5 தயாரிப்பாளர்களும் விஜய் படத்தை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவே வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். அத்துடன் இவர்கள் சம்பளத்தை விட, எவ்வளவு கேட்டாலும் கொட்டிக் கொடுக்கவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதிலும் விஜய்யின் லியோ படத்தை தயாரிக்கும் லலித், படத்தின் லாபத்தில் இருந்து ஒரு பங்கை விஜய்க்கு கொடுக்கும் முடிவில் இருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →