வயது மீறிய உறவால் நாட்டையே விட்டு ஓடிய ஹீரோ.. கமல் போல் 5 வயதில் நடிக்க வந்தவருக்கு கிடைத்த நோயாளி பட்டம்

நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றெல்லாம் அந்த நடிகர் சொன்னதில்லை. கமல் போல் தன்னுடைய ஐந்தாவது வயதில் நடிக்க வந்து விட்டார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டினாலும் அவருக்கென அந்தஸ்து என்னமோ கமல் படத்தில் தான் கிடைத்தது.

ஆரம்பத்தில் 500 ரூபாயிலிருந்து தன்னுடைய சினிமா கேரியரே துவங்கிய நடிகர், அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார். வளர்ந்த பின்னும் பெரிதாய் சம்பளம் ஒன்னும் வாங்கவில்லை கிட்டத்தட்ட அவர் வாங்கிய அதிகபட்ச சம்பளமே 20 லட்ச ரூபாய் தான். ஆனால் ஒரு பெரிய ஹீரோவிற்கு உண்டான கர்வம் அவரிடம் இருந்தது.

கர்வம் இருந்தால் தான் தன்னை 4 பேர் மதிப்பார்கள் என்ற ஒரு அடையாளத்தோடு சுற்றி வந்தார்.அந்த கர்வத்திற்கெல்லாம் காரணம் அவர் சின்ன வயதில் நிறைய அடிபட்டு சினிமாதுறையில் வளர்ந்ததுதான். ஒரு கட்டத்தில் அந்த இளைஞனின் நடிப்பை பார்த்து கமலே மிரண்டுள்ளார்.

நம்மவர் படத்தில் ஒரு துடிப்பான இளைஞன் வேண்டும். காலேஜ் வயதில் உள்ள அந்த இளைஞன் பணத்திமிர் மற்றும் கர்வம் அதிகமாய் இருக்கிற கதாபாத்திரமாய் நடிக்க வேண்டும் என்று கமல் தேடிய இளைஞன் தான் கரன். இவர் அந்த படத்தில் கமலுக்கு நல்ல ஒரு போட்டி கொடுத்து நடித்து இருப்பார்.

இப்பொழுது சினிமா வாழ்க்கையை வேண்டாம் என்று அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இவர் வயது மீறிய ஒரு பெண்ணிடம் தகாத உறவில் இருந்துள்ளார். அந்த பெண்தான் இவரின் மேனேஜராக செயல்பட்டு வந்துள்ளார். இவர் நடிக்கக்கூடிய படங்கள் எல்லாம் அவரின் கண்காணிப்பில் தான் கால் சீட்டுகள் வழங்கப்படும்.

ரொம்ப காலமாக இப்படி ஒரு லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த கரணை தனது சொந்த குடும்பமே இவர் அந்த விஷயத்தில் ஒரு நோயாளி என்று ஒதுக்கி உள்ளது. அதன் பின் சினிமாவையும் தொலைத்து, குடும்பத்தையும் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார் கரண். ஒரு நல்ல நடிகரின் என் வாழ்க்கையை தகாத உறவு இப்படி சீரழிந்து விட்டது.