இந்திய அணியை விட நாங்கள் கெத்து .. குளிர்விட்டு போனதால் கத்துகக்குட்டிகளை மிரட்டும் லிட்டன்

சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு குளிர்விட்டு போய் உள்ளது. வெளிப்படையாக இந்திய அணியை வம்பிழுத்து வருகிறார்கள். எப்பொழுதுமே பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ஒரு அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்வார்கள்.

ஒரு காலத்தில் மைதானத்தில் அவர்களின் நடத்தை ரொம்ப மோசமாக இருக்கும். இதற்கு ஒரு முன்னுதாரணம் அந்த அணியின் முன்னாள் கேப்டனும், இந்நாள் வீரருமான ஷாஹிப் அல்ஹசன் தான். மைதானத்தில் மிகவும் எரிச்சல் ஊட்டும் விதத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்.

இப்பொழுதும் பாகிஸ்தான் அணியை அவர்கள் சொந்த மண்ணிலேயே பங்களாதேஷ் வீழ்த்தியது . இதன் காரணமாக இந்திய அணியிடம் ஏற்கனவே டெஸ்ட் தொடருக்கு முன்பாக வாய் கொடுத்து மொத்தமாய் வாங்கிக் கொண்டது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ரெண்டையும் அசால்டாக வெற்றி பெற்றது.

குளிர்விட்டு போனதால் கத்துகக்குட்டிகளை மிரட்டும் லிட்டன்

இப்பொழுது அந்த அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இப்போதும் அந்த அணியின் வீரர் லிட்டன் தாஸ் இந்திய அணியை வம்புக்கு இழுத்து வருகிறார். இந்திய அணியை விட ஆக்ரோஷமான அணி நாங்கள் தான். அவர்களை எளிதாக மைதானத்தில் வீழ்த்தி விடுவோம் என கூறி வருகிறார்.

ரோஹித், விராட் கோலி, ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றதால் இந்திய அணியில் கத்துக்குட்டி வீரர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு போதிய அனுபவம் இல்லாததால் லிட்டன் தாஸ் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். 20 ஓவர் தொடரில் நாங்கள் தான் வெல்வோம் என்று கூறுகிறார்.

- Advertisement -spot_img

Trending News